குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கைதுசெய்ய பொலிசார் அவரின் வீடு சென்றபோது, பொலிசாரை கண்டு ஓடிய குடும்பஸ்தர் அருகிலுள்ள வீட்டின் கிணற்றினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, இராமநாதபுரம் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோத கசிசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக நேற்றிவு 24.09.2025 சுமார் 6.30 மணி அளவில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 6ம் யூனிட் இராமநாதபுரம் ஆலடி பகுதிக்கு விரைந்த பொலிஸார், குறித்த சந்தேக நபரை கைதுசெய்ய முயன்றபோது தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

