இரணைமடுக் குளத்தின் கீழான 2025ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் தலைமையில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன கட்டிடத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், மாவட்ட விவசாயத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர், கமநல காப்புறுதிச்சபை மாவட்ட உதவிப்பணிப்பாளர், விவசாயத்திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
2025, ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்ச்செய்கை தற்பொழுது ஆரம்பிக்கப்படுவதற்கான முன் ஆயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் நடைபெற்றது.
இதன் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் பல முக்கிய விடயங்களை தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், தற்பொழுது இரணமடு குளத்தின் நீர்மட்டமானது 19/5 அடி நீர்மட்டமாக காணப்படுவதாகவும், 21,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு குறித்த நீர் பாசனம் செய்யவேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் நெற்செய்கை 01.10.2025 தொடக்கம் 10.11.2025 வறையான காலப்பகுதிகள் ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும், 15.11.2025 திகதிகளில் நீர்ப்பாசனம் செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். எனவே விவசாயிகள் உரிய காலத்தில் நெற்ச்செய்கையினை ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
