உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அம்பன் கிராமத்தில் உள்ள ஓர் வறுமைக்கோட்டில் உள்ள குடும்பத்திற்கு மருதங்கேணி பொலிசார் 25000 ரூபாய் பெறுமதியான பொதி ஒன்றினை வழங்கிய விடயம் பேசும்பொருளாக மாறியுள்ளது.
குறித்த பொதியில் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், எதிர் வரும் முதலாம் திகதி தாழையடி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் தினத்தை மிகவும் சிறப்பாக நடத்தவும் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

