ஜூட் சமந்த
காய்கறிகளுடன் மறைத்து 643 கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஜீப் ரக பொலரோ வண்டி மற்றும் இரண்டு சந்தேக நபர்களையும் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி, நுரச்சோலையில் உள்ள பிரபலமான தனியார் வணிக நிறுவனத்திற்கு முன்னால் நேற்று 7 ஆம் தேதி குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான காய்கறிகளை ஏற்றிச் சென்ற பொலேரோ ஜீப் வண்டியை நுரைச்சோலை தள கடற்படையினர் ஆய்வு செய்தபோது, காய்கறிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 பொதிகள் அடங்கிய சுமார் 643 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.
பீடி இலைகளுடன் கைதுசெய்யப்ட்டவர்கள் பாலகுடா மற்றும் பாலாவி பகுதிகளைச் சேர்ந்த 43 மற்றும் 37 வயதுடைய இருவர்கள் என தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட பீடி இலைகள், கெப் வண்டி மற்றும் இரண்டு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைக்காக நோரச்சோலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.