ஜூட் சமந்த
நாத்தாண்டியா கல்விப் பிரிவில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றிய ஓய்வுபெற்ற 37 அதிபர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி நேற்று 7 ஆம் திகதி மாரவில, முதுகடுவவில் நடைபெற்றது.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்புத்தத்வ ஜெயந்தி மனித உரிமைகள் அமைப்பால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேவேளை ஓய்வுபெற்ற அதிபர்களின் உடல்நலம் குறித்து பரிசோதிக்க சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற அதிபர் ஒருவருக்கு ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. உப்புல் சந்தன பாராட்டு விருதை வழங்கிய தருணத்தையும் மருத்துவ முகாமின் ஒரு காட்சியையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.
