ஜூட் சமந்த
மோட்டார் சைக்கிளை திருடி அதனை ஓட்டி வந்த நபர் ஒருவரை சிலாபம் காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிலாபம் தபால் நிலையம் அருகே நேற்று 15 ஆம் தேதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரையே இவ்வாறு போலீசார் கைது செய்துள்ளனர்.
சிலாபம் அம்பகடவில பகுதியைச் சேர்ந்த ஒருவர், நோயாளி ஒருவரைப் பார்க்க சிலாபம் பொது மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவருடைய மோட்டார் சைக்கிள் இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
அவர் தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனையின் முன் நிறுத்திவிட்டு சென்றிருந்த நிலையில், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளைத் திருடி அதை இயக்க முடியாமல் தள்ளிக்கொண்டு சென்றவேளை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
