ஜூட் சமந்த
தம்பபன்னி அக்வெஸ்ஸ 3 எனும் தலைப்பில் இடம்பெற்ற புத்தளம் மாவட்டம் 2025 இலக்கிய விழா நிகழ்வு இன்று 17ஆம் திகதி மஹாவெவ முத்ராதேவி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக மற்றும் புத்தளம் மேலதிக மாவட்ட செயலாளர் புபுத்திகா எஸ்.பண்டார தலைமையில் இவ் இலக்கிய விழா நடைபெற்றது.
இந்த இலக்கிய விழாவில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 கலைஞர்களுக்கு கலாதினி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவருக்கும் குறித்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
ஊடகவியலாளர்களான எஸ்.மகாதேவன் மற்றும் ஜயரத்ன விக்கிரமாராச்சி ஆகியோருக்கும் இவ்வாறு கலாதினி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

