(உடப்பு குறூப் நிருபர்)
உடப்பு இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் “வாணி விழா” நிகழ்வு உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர் திரு.பி. சுகந்தன் தலைமையில் கடந்த (16) வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிலாபம் ஶ்ரீஜெயனிதா நகை மாளிகை உரிமையாளர் திரு.வி.சுதானந்தம், அருள் நாகநாதன் அறக்கட்டளை நிதியஸ்தாபகர் திரு.ஏ.நாகநாதன், உடப்பு இந்து ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு.வி.கந்தசாமி, அத்துடன் உடப்பு முன்னாள் ஆலய பூசகர் எம். பரந்தாமன்(ஜோதிடர்), கலாபூஷணம் மற்றும் ஊடகவியலாளரான திரு.வி.வீரசொக்கன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்களும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் கலந்து கொண்ட பிரதம அதிதிகளுக்கும் பொன்னாடைகளும் போர்த்தி கௌரவமும் அளிக்கப்பட்டது.



