ஜூட் சமந்த
நாட்டின் தொடர்ச்சியான மலை வீழ்ச்சியினால் மாஓய நிரம்பி வழியும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று 19 இரவு 11.30 க்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை 21 மதியம் 12.00 வரை செல்லுபடியாகும் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அபாயம் காரணமாக ஆலவ்வ, திவுலபிடி, மிரிகம, பன்னல, ஆகவ, மீகமுவ, கடான மற்றும் தங்கொடுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட மாஓயா அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அதிக மலை வீழ்ச்சி காரணமாக தெதுறுஓய, ராஜாங்கனய மற்றும் அங்கமுவ வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 20 ஆம் தேதி காலை நிலவரப்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் தலா 04 அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 16,250 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் தலா 06 அடி திறக்கப்பட்டுள்ளன, மேலும் வினாடிக்கு 6,996 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படும். அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் தலா 05 அடி திறக்கப்பட்டுள்ளன. அந்த வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 2,536 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் தேங்குவதால் கலா ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை காரணமாக கலா ஓயாவைச் சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைப் பிரிவு மேலும் கூறுகிறது.
இதற்கிடையில், கலா ஓயாவில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வில்பத்து தேசிய பூங்காவிற்குள் நுழைய உதவும் எலுவன்குளம் பாலத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.