இவ்வருடம் ஜனவரி 1 முதல் இதுவரையான காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் இவ்வருடம் ஜனவரி 1 முதல் இதுவரையான காலப்பகுதிகளில் 2539.5 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 1481.4 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 32.6 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளும், 14,419.4 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் 30 லட்சம் போதை மருந்துகளும், 6 லட்சம் போதை மாத்திரைகளும், 575 கிராம் ஹெரோயின் ஏனைய போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும் போதை தொடர்பாக 1 லட்சத்து 87 ஆயிரத்து 862 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


