ஜூட் சமந்த
கூரை சீட்டுகள் (ஆஸ்பெஸ்டாஸ்) ஏற்றிச்சென்ற லாரியில் இளைஞர் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று 28.10.2025 இடம்பெற்ற குறித்த விபத்தில் உடப்பு – 5வது ஒழுங்கையில் வசிக்கும் கந்தன் ஸ்ரீதரன் (17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆரச்சிகட்டுவ பகுதியில் உள்ள கூரை சீட்டுகள் (ஆஸ்பெஸ்டாஸ்) உற்பத்தி தொழிற்சாலையில் உயிரிழந்த இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார்.
கூரை சீட்டுகள் ஏற்றப்பட்ட லாரியின் பின்புறத்தில் அமர்ந்திருந்தவேளை தொழிற்சாலை வளாகத்தில் வைத்தே கூரை சீட்டுகலுக்குள் சிக்கி படுகாயமடைந்தார்.
பின்னர், இளைஞர் மற்ற ஊழியர்களால் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஆரச்சிகட்டுவ போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


