கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (03) 21 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களுடன் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின், பாங்காக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக வந்த 28 வயதுடைய இலங்கையர் ஒருவர் ரூ. 21 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 2.07 கிலோ குஷ் கஞ்சாவுடன் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்றபோது இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E1171 இல் வந்தபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று 3, 2025 குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட குஷ் ரக போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 21 மில்லியனுக்கும் அதிகமாகும். NCU அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபரும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டன.


