ஜூட் சமந்த
இடிந்து விழுந்த வீட்டின் சுவருக்கடியில் சிக்கி படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர், அதிகம – மொஹோரியாவைச் சேர்ந்த ரசிக பிரியங்கர என்ற மூன்று குழந்தைகளின் தந்தை ஆவார்.
இந்த விபத்து நேற்று 8 ஆம் தேதி மாலை இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஒரு பாழடைந்த வீட்டில் வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
நிரந்தர வருமான ஆதாரம் இல்லாததால், அவர்கள் வசிக்கும் வீட்டைப் புதுப்பிக்க முடியவில்லை எனவும், பாழடைந்த வீட்டை சரிசெய்யுமாறு அப்பகுதிவாசிகள் மககும்புக்கடவல பிரதேச செயலாளருக்கும், அந்த அலுவலகத்தின் சமுர்த்தி பிரிவிற்கும் பல கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், இதுபோன்ற விபத்து நடந்திருக்காது என்று அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் உடலின் பல பாகங்களில் எலும்புகள் உடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



