A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


