கிளிநொச்சி மாவட்டத்தில் 2025/2026 பெரும்போக நெற்செய்கைக்காக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 10 கமநல சேவை நிலையங்களின் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை 6,256 விவசாயிகளுக்கு 4,649.1752 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் பயிர்செய்கைக்காக 10கோடியே 13லட்சத்து 61ஆயிரத்து 486 ரூபா தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பில் இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள ஏனைய விவசாயிகளுக்கு தொடர்ந்து வைப்பிலிடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு வழங்கப்படும் 15ஆயிரம் ரூபா உரமானிய கொடுப்பனவு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



