ரூ.300 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்பு
இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொதியில் இருந்து 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர், நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், குறித்த பொதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு மீட்கப்பட்ட குஷ் போதைப்பொருள் கையிருப்பின் சந்தை மதிப்பு சுமார் ரூ.300 மில்லியன் என்று இலங்கை சுங்கம் குறிப்பிடுகிறது.



