ஜூட் சமந்த
இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.2 மில்லியன் மோசடி தொடர்பில் சிலாபம் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மஹாவெவ, கொஸ்வாடியைச் சேர்ந்த ரண்டுனு பத்திரன்னலகே துஷான் கவிந்த (30 வயது) என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடவத்தை கிரில்லவலவில் வசிக்கும் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9, 2024 முதல் மூன்று சந்தர்ப்பங்களில் அவரிடமிருந்து ரூ.1.2 மில்லியன் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக மாரவில பொலிஸாருக்கு தெரிவித்த புகார்தாரர், வேலையோ அல்லது அவர் கொடுத்த பணமோ அவருக்குத் திருப்பித் தரப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
கூறப்படும் மோசடி ரூ.1 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதால், மாரவில பொலிசார் விசாரணையை சிலாபம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
சந்தேக நபர் தேடப்பட்டுவரும் நிலையில், பொலிஸார் மேதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.


