இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வு இன்று (23) இந்தியாவில் இடம்பெற்றது.
இந்தியாவின் திருப்பத்தூர் நகரில் இந்தத் திருமண வைபவம் நடைபெற்றது.
ஜீவன் தொண்டமான், சீதைஸ்ரீ நாச்சியார் என்பவரை கரம்பிடித்துள்ளார்.
திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டுள்ளார்.
அவருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும், பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் குடும்ப முக்கியஸ்தர்களும் பங்கேற்றுள்ளனர்.





