மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடித்தல் மற்றும் கடல்வழிப் பயணங்களைத் தவிர்க்கவும்.
அடுத்த 24 மணித்தியாலத்திற்காள நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 நவம்பர் 27 பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 120 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 6.7° இற்கும் கிழக்கு நெடுங்கோடு 82.1° இற்கும் அருகில் மையம் கொண்டிருக்கின்றது. இது அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவடைந்து வடமேற்கு – வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இலங்கை வானிலை மையம்


