ஜூட் சமந்த
கற்பிட்டி – சேதாப்பொல பகுதியில் இயங்கி வந்த பாரியளவிலான கசிப்பு (சட்டவிரோத மதுபானம்) உற்பத்தி நிலையமொன்றை வெற்றிகரமாக சுற்றிவளைக்க நுரைச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சோதனை நடவடிக்கை கடந்த 23ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
கசிப்பு உற்பத்திக்குத் தேவையான ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டிருந்த போது, சேதாப்பொல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உற்பத்தி நிலையத்திலிருந்து கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 3,60,000 மில்லி லீட்டர் கோடா (Goda), ஒரு தொகுதி உபகரணங்கள் மற்றும் 02 இரும்பு பீப்பாய்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
குறித்த சந்தேகநபர் நீண்டகாலமாக ஒரு சதுப்புநிலப் பகுதியில் இரகசியமாக இந்த உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்துள்ளதாகவும், அங்கிருந்து வெளி மாகாணங்களுக்கும் கசிப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் விஜேரத்ன தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



