முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவை, இன்றைய தினம் (27) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என தனது சட்டத்தரணிகள் குழுவினூடாக அவர் அறிவித்துள்ளார்.
குறித்த விசாரணைக்காக முன்னிலையாவதற்கு முன்னர், தமக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


