Wednesday, January 28, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமத்திய அரசின் கீழ் இருந்தும் தீராத கட்டிடத் தட்டுப்பாடு!

மத்திய அரசின் கீழ் இருந்தும் தீராத கட்டிடத் தட்டுப்பாடு!

45 வார்டுகள், 80,000 நோயாளிகள் – ஆனால் போதிய இடவசதி இல்லை: சிலாபம் மருத்துவமனையின் அவலநிலை.

ஜூட் சமந்த

மத்திய அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டாலும், சிலாபம் பொது மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைமை காணப்படுவதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்தார்.

‘டிட்டா’ (Ditta) சூறாவளியினால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது மருத்துவமனையை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பாக நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாபம் பொது மருத்துவமனையின் மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மருத்துவமனை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வைத்தியர் சுமித் அத்தநாயக்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமேல் மாகாண சபையினால் ஒரு ஆதார மருத்துவமனையாக நிர்வகிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, 2012 ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. அதிலிருந்து இது சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையாக மாறியுள்ளது. பொதுவாக ஒரு மாவட்டத்தில் ஒரு பொது மருத்துவமனை மாத்திரமே இருக்கும், ஆனால் சில மாவட்டங்களில் மாத்திரம் இரண்டு பொது மருத்துவமனைகள் உள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஏனைய அனைத்து மருத்துவமனைகளும் வடமேல் மாகாண சபையினால் நிர்வகிக்கப்படும் நிலையில், இந்த மருத்துவமனை மாத்திரம் மத்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மாகாண சபையினால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனையை விட, மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு அதிக வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டினார்.

சிலாபம் பொது மருத்துவமனையில் 40 விசேட வைத்தியர்கள், 250 வைத்தியர்கள், 300 தாதிகள் உட்பட மொத்தம் 975 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

மருத்துவமனையில் 45 வார்டுகள் பராமரிக்கப்படுவதுடன், அங்கு ஆண்டுக்குக் குறைந்தது 80,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். அத்துடன், நாளொன்றுக்கு சுமார் 800 வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் அனைத்து மருத்துவச் சேவைகளும் தினசரி வழங்கப்படுகின்றன.

நோயாளிக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தேவையான சேவைகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாகப் பொதுமக்களுக்கு அவசியமான பல சேவைகளை வழங்க எங்களால் முடியவில்லை. இதற்குப் பிரதான காரணமாகக் கட்டிடத் தட்டுப்பாடு காணப்படுகிறது.

சட்ட சிக்கல்கள் அல்லது பிற காரணங்களால் சில கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக இடைநடுவில் நின்றுபோயுள்ளன. மருத்துவமனையின் முக்கிய கிளினிக்குகள் மற்றும் சிகிச்சை மையங்கள் பிரதான வீதிக்கு மறுபுறம் உள்ள சிலாபம் நகர சபைக்குச் சொந்தமான இரண்டு கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அக்கிளினிக்குகளில் இருந்து நோயாளிகளைச் சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் ஊடாகவே மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டியுள்ளது.

இது நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் ஆபத்தான ஒரு நிலைமையாகும். கிளினிக்குகளை நடத்துவதற்கு இடமில்லாத விசேட வைத்தியர்களும் எமது மருத்துவமனையில் உள்ளனர்.

தற்போது கிளினிக்குகள் மற்றும் சிகிச்சை மையங்கள் இயங்கும் கட்டிடங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு சிலாபம் நகர சபை கோரியுள்ளது, ஆனால் மாற்று இடம் இல்லாததால் அந்த இடங்களில் நாங்கள் இன்னும் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறோம். ‘டிட்டா’ சூறாவளியின் போது, பணியாளர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது நோயாளிகளையும் மருத்துவ உபகரணங்களையும் பாதுகாக்கச் செயற்பட்டனர். இருப்பினும், வெள்ளப்பெருக்கு காரணமாகச் சில மருத்துவ உபகரணங்கள் மற்றும் களஞ்சியப்படுத்தப்பட்ட மருந்துகள் சேதமடைந்தன.

ஒரு மாத காலத்திற்குள் மருத்துவமனையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடிந்தது, இதற்கு விசேட வைத்தியர்கள் முதல் அனைத்துப் பணியாளர்களின் அர்ப்பணிப்பும், நன்கொடையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியும் காரணமாக அமைந்தது. மருத்துவமனையில் நிலவும் கட்டிடப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தால், எதிர்காலத்தில் மக்களுக்கு இன்னும் மேலான சேவையை வழங்க முடியும் என்று பணிப்பாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

மத்திய அரசின் கீழ் இருந்தும் தீராத கட்டிடத் தட்டுப்பாடு!

45 வார்டுகள், 80,000 நோயாளிகள் – ஆனால் போதிய இடவசதி இல்லை: சிலாபம் மருத்துவமனையின் அவலநிலை.

ஜூட் சமந்த

மத்திய அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டாலும், சிலாபம் பொது மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைமை காணப்படுவதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்தார்.

‘டிட்டா’ (Ditta) சூறாவளியினால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது மருத்துவமனையை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பாக நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாபம் பொது மருத்துவமனையின் மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மருத்துவமனை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வைத்தியர் சுமித் அத்தநாயக்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமேல் மாகாண சபையினால் ஒரு ஆதார மருத்துவமனையாக நிர்வகிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, 2012 ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. அதிலிருந்து இது சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையாக மாறியுள்ளது. பொதுவாக ஒரு மாவட்டத்தில் ஒரு பொது மருத்துவமனை மாத்திரமே இருக்கும், ஆனால் சில மாவட்டங்களில் மாத்திரம் இரண்டு பொது மருத்துவமனைகள் உள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஏனைய அனைத்து மருத்துவமனைகளும் வடமேல் மாகாண சபையினால் நிர்வகிக்கப்படும் நிலையில், இந்த மருத்துவமனை மாத்திரம் மத்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மாகாண சபையினால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனையை விட, மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு அதிக வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டினார்.

சிலாபம் பொது மருத்துவமனையில் 40 விசேட வைத்தியர்கள், 250 வைத்தியர்கள், 300 தாதிகள் உட்பட மொத்தம் 975 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

மருத்துவமனையில் 45 வார்டுகள் பராமரிக்கப்படுவதுடன், அங்கு ஆண்டுக்குக் குறைந்தது 80,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். அத்துடன், நாளொன்றுக்கு சுமார் 800 வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் அனைத்து மருத்துவச் சேவைகளும் தினசரி வழங்கப்படுகின்றன.

நோயாளிக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தேவையான சேவைகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாகப் பொதுமக்களுக்கு அவசியமான பல சேவைகளை வழங்க எங்களால் முடியவில்லை. இதற்குப் பிரதான காரணமாகக் கட்டிடத் தட்டுப்பாடு காணப்படுகிறது.

சட்ட சிக்கல்கள் அல்லது பிற காரணங்களால் சில கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக இடைநடுவில் நின்றுபோயுள்ளன. மருத்துவமனையின் முக்கிய கிளினிக்குகள் மற்றும் சிகிச்சை மையங்கள் பிரதான வீதிக்கு மறுபுறம் உள்ள சிலாபம் நகர சபைக்குச் சொந்தமான இரண்டு கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அக்கிளினிக்குகளில் இருந்து நோயாளிகளைச் சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் ஊடாகவே மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டியுள்ளது.

இது நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் ஆபத்தான ஒரு நிலைமையாகும். கிளினிக்குகளை நடத்துவதற்கு இடமில்லாத விசேட வைத்தியர்களும் எமது மருத்துவமனையில் உள்ளனர்.

தற்போது கிளினிக்குகள் மற்றும் சிகிச்சை மையங்கள் இயங்கும் கட்டிடங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு சிலாபம் நகர சபை கோரியுள்ளது, ஆனால் மாற்று இடம் இல்லாததால் அந்த இடங்களில் நாங்கள் இன்னும் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறோம். ‘டிட்டா’ சூறாவளியின் போது, பணியாளர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது நோயாளிகளையும் மருத்துவ உபகரணங்களையும் பாதுகாக்கச் செயற்பட்டனர். இருப்பினும், வெள்ளப்பெருக்கு காரணமாகச் சில மருத்துவ உபகரணங்கள் மற்றும் களஞ்சியப்படுத்தப்பட்ட மருந்துகள் சேதமடைந்தன.

ஒரு மாத காலத்திற்குள் மருத்துவமனையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடிந்தது, இதற்கு விசேட வைத்தியர்கள் முதல் அனைத்துப் பணியாளர்களின் அர்ப்பணிப்பும், நன்கொடையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியும் காரணமாக அமைந்தது. மருத்துவமனையில் நிலவும் கட்டிடப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தால், எதிர்காலத்தில் மக்களுக்கு இன்னும் மேலான சேவையை வழங்க முடியும் என்று பணிப்பாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular