Wednesday, January 28, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமுருகண்டியில் நித்திரை கலக்கத்தால் நேர்ந்த கோர விபத்து!

முருகண்டியில் நித்திரை கலக்கத்தால் நேர்ந்த கோர விபத்து!

ஏ9 பிரதான வீதியில் இன்று பகல் இடம்பெற்ற பயங்கர விபத்தில், அரச பேருந்தும் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பேருந்து சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகண்டி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

எதிரே யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நித்திரை கலக்கம் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் வேகமாக வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸார், சிதைந்த பாகங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் சாரதிகள், போதிய ஓய்வெடுத்து வாகனங்களை செலுத்துவதன் மூலமே இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும் என பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

முருகண்டியில் நித்திரை கலக்கத்தால் நேர்ந்த கோர விபத்து!

ஏ9 பிரதான வீதியில் இன்று பகல் இடம்பெற்ற பயங்கர விபத்தில், அரச பேருந்தும் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பேருந்து சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகண்டி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

எதிரே யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நித்திரை கலக்கம் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் வேகமாக வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸார், சிதைந்த பாகங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் சாரதிகள், போதிய ஓய்வெடுத்து வாகனங்களை செலுத்துவதன் மூலமே இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும் என பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular