Thursday, March 12, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகல்பிட்டி கடலில் துள்ளிக்குதிக்கும் டொல்பின்கள்!

கல்பிட்டி கடலில் துள்ளிக்குதிக்கும் டொல்பின்கள்!

ஜூட் சமந்த

கல்பிட்டி கடற்பரப்பில் தற்போது டொல்பின்கள் அதிகளவில் வந்து குவிவதால் அவற்றைக் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் அப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாத இறுதி வரை கல்பிட்டி கடற்பரப்பில் இந்த டொல்பின்களைக் காண முடியும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கல்பிட்டி, கந்தகுலிய மற்றும் இலந்தவெளிய ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இருந்து படகு மூலம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மேற்கு நோக்கி கடலுக்குள் சென்றால் இந்த டொல்பின் கூட்டங்களை நேரில் கண்டு ரசிக்கலாம்.

“ஸ்பின்னர்” டொல்பின்களின் சாகசம்

இங்கு காணப்படும் டொல்பின்கள் “ஸ்பின்னர் டொல்பின்கள்” (Spinner Dolphins) என்று அழைக்கப்படுகின்றன. இவை சிறிய மற்றும் பெரிய கூட்டங்களாகக் கடலில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக, இளம் வயது டொல்பின்கள் கடலில் உயரே துள்ளிக்குதித்து வித்தை காட்டுவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஆண் டொல்பின்கள் தமக்கான பெண் துணையை ஈர்ப்பதற்காகவே இவ்வாறான சாகசங்களைச் செய்வதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இயற்கையிலேயே மனிதர்களை விரும்பும் குணம் கொண்ட இந்த டொல்பின்கள், சுற்றுலாப் பயணிகள் வரும் படகுகளைச் சூழ நீந்தி விளையாடுவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த டொல்பின்கள், கடந்த காலங்களில் சில தேவையற்ற மனித நடவடிக்கைகளால் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. எனவே, இந்த இயற்கை வளத்தைப் பாதுகாத்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

கல்பிட்டி கடலில் துள்ளிக்குதிக்கும் டொல்பின்கள்!

ஜூட் சமந்த

கல்பிட்டி கடற்பரப்பில் தற்போது டொல்பின்கள் அதிகளவில் வந்து குவிவதால் அவற்றைக் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் அப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாத இறுதி வரை கல்பிட்டி கடற்பரப்பில் இந்த டொல்பின்களைக் காண முடியும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கல்பிட்டி, கந்தகுலிய மற்றும் இலந்தவெளிய ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இருந்து படகு மூலம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மேற்கு நோக்கி கடலுக்குள் சென்றால் இந்த டொல்பின் கூட்டங்களை நேரில் கண்டு ரசிக்கலாம்.

“ஸ்பின்னர்” டொல்பின்களின் சாகசம்

இங்கு காணப்படும் டொல்பின்கள் “ஸ்பின்னர் டொல்பின்கள்” (Spinner Dolphins) என்று அழைக்கப்படுகின்றன. இவை சிறிய மற்றும் பெரிய கூட்டங்களாகக் கடலில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக, இளம் வயது டொல்பின்கள் கடலில் உயரே துள்ளிக்குதித்து வித்தை காட்டுவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஆண் டொல்பின்கள் தமக்கான பெண் துணையை ஈர்ப்பதற்காகவே இவ்வாறான சாகசங்களைச் செய்வதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இயற்கையிலேயே மனிதர்களை விரும்பும் குணம் கொண்ட இந்த டொல்பின்கள், சுற்றுலாப் பயணிகள் வரும் படகுகளைச் சூழ நீந்தி விளையாடுவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த டொல்பின்கள், கடந்த காலங்களில் சில தேவையற்ற மனித நடவடிக்கைகளால் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. எனவே, இந்த இயற்கை வளத்தைப் பாதுகாத்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular