Wednesday, March 18, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsவடகொரியா தேர்தலில் கிம் ஜாங் உன் அபார வெற்றி!

வடகொரியா தேர்தலில் கிம் ஜாங் உன் அபார வெற்றி!

வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி பெற்றுள்ளார். வெறும் 0.07% மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1957க்கு பிறகு முதல்முறையாக எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 15 அன்று நடைபெற்ற 15-வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தலில், கிம் தலைமையிலான தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97% வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99% பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாடுகளில் இருப்பவர்கள் அல்லது கடலில் பணிபுரிபவர்கள் (0.0037%) மற்றும் வாக்களிக்க வராதவர்கள் (0.00003%) தவிர மற்ற அனைவரும் வாக்களித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

இருப்பினும், வடகொரியத் தேர்தல் வரலாற்றில் அரிதான நிகழ்வாக, 0.07% பேர் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டுத் தேர்தல் முறையில் ஒரு மாற்றமாகக் கருதப்படுகிறது.

வடகொரியா தேர்தல் சட்டங்களின்படி, தொழிலாளர்கள், விவசாயிகள், சேவைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 687 பிரதிநிதிகள் இந்தப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, உச்ச மக்கள் பேரவைத் தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

வடகொரியா தேர்தலில் கிம் ஜாங் உன் அபார வெற்றி!

வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி பெற்றுள்ளார். வெறும் 0.07% மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1957க்கு பிறகு முதல்முறையாக எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 15 அன்று நடைபெற்ற 15-வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தலில், கிம் தலைமையிலான தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97% வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99% பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாடுகளில் இருப்பவர்கள் அல்லது கடலில் பணிபுரிபவர்கள் (0.0037%) மற்றும் வாக்களிக்க வராதவர்கள் (0.00003%) தவிர மற்ற அனைவரும் வாக்களித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

இருப்பினும், வடகொரியத் தேர்தல் வரலாற்றில் அரிதான நிகழ்வாக, 0.07% பேர் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டுத் தேர்தல் முறையில் ஒரு மாற்றமாகக் கருதப்படுகிறது.

வடகொரியா தேர்தல் சட்டங்களின்படி, தொழிலாளர்கள், விவசாயிகள், சேவைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 687 பிரதிநிதிகள் இந்தப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, உச்ச மக்கள் பேரவைத் தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular