இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி ஒட்டோ டீசல் 79 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 382 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 90 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 443 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 81 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 398 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
எனினும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 90 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 455 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 60 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 255 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.


