Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபாலாவி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் உடல் மீட்பு!

பாலாவி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் உடல் மீட்பு!

புத்தளம், பாலாவி வன்னித்தீவு பகுதியில் திடீரென ஏற்பட்ட பரபரப்புச் சம்பவம் ஒன்று, ஒட்டுமொத்தப் பிரதேச மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆள் நடமாட்டமே இல்லாத, அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமா மீட்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மக்கள், அது யார் என்று பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சி இரட்டிப்பானது. உயிரிழந்தவர் பாலாவி, வன்னித்தீவு, சுருவம் மாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய செனத் தில்ஹார என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துடிப்பான வயதில், வாழ்ந்து முடிக்க வேண்டிய ஒரு இளம் உயிர், இப்படி ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டமை ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்த மர்ம மரணத்தின் பின்னணி என்னவாக இருக்கும் என்ற தேடலில், உறவினர்களிடம் இருந்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இளைஞருக்கு அண்மைய நாட்களாகக் காதல் விவகாரம் ஒன்று இருந்ததாகவும், அது தொடர்பில் ஏற்பட்ட மன உளைச்சலால், சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது கைகளைத் தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்தக் காதல் விவகாரமே அவரை இந்த விபரீத முடிவை நோக்கித் தள்ளியிருக்குமோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், இது தற்கொலையா? அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் மர்மங்கள் ஒளிந்திருக்கின்றதா? என்ற கேள்விகளுக்கு இன்னும் முறையான பதில்கள் கிடைக்கவில்லை. உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இளம் உயிரின் பிரிவுக்குக் காரணமான உண்மைப் பின்னணி என்ன என்பது, பொலிஸாரின் விரிவான மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கைகளின் பின்னரே முழுமையாக வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

பாலாவி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் உடல் மீட்பு!

புத்தளம், பாலாவி வன்னித்தீவு பகுதியில் திடீரென ஏற்பட்ட பரபரப்புச் சம்பவம் ஒன்று, ஒட்டுமொத்தப் பிரதேச மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆள் நடமாட்டமே இல்லாத, அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமா மீட்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மக்கள், அது யார் என்று பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சி இரட்டிப்பானது. உயிரிழந்தவர் பாலாவி, வன்னித்தீவு, சுருவம் மாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய செனத் தில்ஹார என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துடிப்பான வயதில், வாழ்ந்து முடிக்க வேண்டிய ஒரு இளம் உயிர், இப்படி ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டமை ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்த மர்ம மரணத்தின் பின்னணி என்னவாக இருக்கும் என்ற தேடலில், உறவினர்களிடம் இருந்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இளைஞருக்கு அண்மைய நாட்களாகக் காதல் விவகாரம் ஒன்று இருந்ததாகவும், அது தொடர்பில் ஏற்பட்ட மன உளைச்சலால், சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது கைகளைத் தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்தக் காதல் விவகாரமே அவரை இந்த விபரீத முடிவை நோக்கித் தள்ளியிருக்குமோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், இது தற்கொலையா? அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் மர்மங்கள் ஒளிந்திருக்கின்றதா? என்ற கேள்விகளுக்கு இன்னும் முறையான பதில்கள் கிடைக்கவில்லை. உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இளம் உயிரின் பிரிவுக்குக் காரணமான உண்மைப் பின்னணி என்ன என்பது, பொலிஸாரின் விரிவான மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கைகளின் பின்னரே முழுமையாக வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular