Thursday, July 2, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsடெங்கு பரவலைக் கட்டுப்படுத்த 3 நாட்களுக்கு நாடு தழுவிய ஒழிப்புத் திட்டம்!

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த 3 நாட்களுக்கு நாடு தழுவிய ஒழிப்புத் திட்டம்!

இலங்கையில் சைலண்டாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளது. நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உயர்ந்து வரும் நிலையில், இதனைப் போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அரசாங்கம் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது.

நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் சூழலில், இன்று (02) முதல் மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

“தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்துடன் இணைந்து, நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பங்கெடுக்கவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 55,406 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அங்கு இதுவரை 21,565 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றாடலைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த 3 நாட்களுக்கு நாடு தழுவிய ஒழிப்புத் திட்டம்!

இலங்கையில் சைலண்டாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளது. நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உயர்ந்து வரும் நிலையில், இதனைப் போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அரசாங்கம் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது.

நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் சூழலில், இன்று (02) முதல் மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

“தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்துடன் இணைந்து, நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பங்கெடுக்கவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 55,406 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அங்கு இதுவரை 21,565 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றாடலைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular