“உள்ளூராட்சி மன்றங்களில் எங்கள் உறுப்பினர்களின் வகிபாகம்” என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் வதிவிட செயலமர்வு, இன்று (02) சனிக்கிழமை, மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் உள்ளூராட்சிமன்றங்களில் செயற்படவேண்டிய முறைகள் குறித்தும், எவ்வாறான முறையில் சேவைகளை பெற்றெடுக்க முடியும் என்பது பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
உள்ளூராட்சிமன்றங்களின் ஊடாக மக்களுக்கு செய்யப்படவேண்டிய சேவைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் ஊடாக பெற்றெடுக்கவேண்டிய உதவிகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

