இந்தியாவில் இப்படியொரு கல்யாண முறையா?

21 views

கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு, வாடகைக்கு பெண்கள் கிடைக்கிறார்களாம்.. இதற்காக ரூ. 15,000 முதல் 25,000 வரை அந்தப் பெண்களுக்கு பணம் தரப்படுகிறதாம்.. இதுபோன்ற ஒரு கலாச்சாரம், மேலைத்தேய நாடுகளில் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது நம்முடைய இந்தியாவிலும் ஆரம்பமாகிவிட்டது.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்து, உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமும்கூட.. கடலால் சூழப்பட்டுள்ள இந்த தாய்லாந்துக்கு, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்…

இந்த தாய்லாந்தில், “Wife on Hire” அல்லது “Black Pearl” என்ற நடைமுறை உள்ளது. அதாவது குறிப்பிட்ட பணம் செலுத்தி பெண்களை வாடகை மனைவியாக மாற்றிக்கொள்ளலாம். இந்த தற்காலிகத் திருமண ஏற்பாட்டின் மூலம், மனைவியின் பாரம்பரியக் கடமைகள் அனைத்தையும் அந்த பெண் நிறைவேற்ற வேண்டும்… ஆனால், ஒப்பந்த காலத்துக்கு மட்டுமே அந்த பெண் மனைவியாக இருப்பார். இது தாய்லாந்திலுள்ள பல பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மிகவும் உபயோகமாக இருக்கிறதாம்.

இந்த பெண்களின் வயது, அழகு, கல்வி மற்றும் ஒப்பந்தத்தின் காலம் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து அவர்களுக்கு வழங்கப்படும் பணம் மாறுபடும். அதன்படி 1,600 டாலர் முதல் 116,000 டாலர் வரை வாடகை மனைவிகளுக்கு பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

இப்போது விஷயம் என்னவென்றால், இதுபோன்ற ஒருநடைமுறை, நம்முடைய இந்தியாவிலும் இருக்கிறதாம். மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள சிவபுரி மாவட்டத்தின் கிராமங்களில், இப்படியொரு நடைமுறை பலவருட காலமாகவே இருந்துவருவதாக தெரியவந்துள்ளது.

Valentine Offer

இந்த நடைமுறைக்கு “தாதிச்சா பிரதா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெரிய பெரிய பணக்கார ஆண்கள், தங்களுக்கு பிடித்த பெண்களை ஏலத்தில் எடுத்துக் கொள்வார்கள்.. 1 மாதம் முதல் 1 வருடம் வரை, இந்த பணக்கார ஆண்களுக்கு மனைவிகளாக அப்பெண்கள் வாடகைக்கு விடப்படுகிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், இளம் பெண்கள் மட்டுமல்லாமல், திருமணமான மனைவிகளையும் சந்தையில் வாடகைக்கு விடுகிறார்கள்.

கன்னித்தன்மை, உடல் தோற்றம், வயது போன்றவற்றை வைத்து, பெண்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். 8 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட கன்னிப்பெண்களுக்கு முன்னுரிமை தரப்படுவதாகவும், ரூ. 15,000 முதல் 25,000 வரை பணம் தரப்படுவதாகவும, லீகல் சர்வீசஸ் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.