கல்பிட்டியில் பிடிபட்ட 408 கி.கிராம் பீடி இலைகள்!

164 views

ஜூட் சமந்த

இந்தியாவிலிருந்து கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 408 கிலோகிராம் பீடி இலைகளை கொண்டு செல்ல தயாரான சந்தேக நபரை நுரைச்சோலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கல்பிட்டி, ஏத்தாளை பகுதியில் நேற்று 2 ஆம் தேதி இரவு இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

காவல்துறை சிறப்பு பணியகத்தின் கல்பிட்டி பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 13 பீடி இலைகள் அடங்கிய பொதிகள் மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு பொலேரோ ஜீப்பும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பீடி இலைகளுடன் புத்தளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் ஜீப் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.

நுரைச்சோலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.