நாகவில்லுவிலிருந்து இரு பிரதேச சபை உறுப்பினர்கள்!

34 views

நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான, புத்தளம் பிரதேச சபையின் பொத்துவில்லு வட்டாரத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காரியாலயம் நேற்று புத்தளம் நாகவில்லுவில் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

நடைபெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான புத்தளம் பிரதேச கள விஜயத்தின்போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காரியாலயம், கட்சியின் தலைவரினால் திறந்துவைக்கப்பட்டது.

மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் குறித்த காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிழ்வில் பங்கேற்று கருத்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், சென்ற முறை நாகவில்லுவில் இருந்து பிரதேச சபைக்கு ஒருவரை அனுப்பி இருந்தோம், ஆனால் இம்முறை இன்ஷா அல்லாஹ் பிரதேச சபைக்கு இருவரை அனுப்ப உள்ளோம் என உறுதியளித்தார்.

நாகவில்லு பகுதியில் அமைந்துள்ள ரசூல் நகர் கிராமம் ஒரு போதும், நாகவில்லு எருக்கலம்பிட்டியில் தமது ஊர் வேட்பாளர்களை களமிறக்க ஆசைப்படவில்லை எனவும், அவர்களின் நல்ல எண்ணத்திற்காக அவர்களுக்கு போனஸ் வழங்க கட்சி முன் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புத்தளம் பிரதேச சபையில் போட்டியிட்டு கட்சி பெற்றுக்கொள்ளும் அதிகப்படியான வாக்குகளை அடிப்படையாகக்கொண்டு, ரசூல் நகர் கிராம மக்களுக்கு தமது கட்சி ஒரு போனஸ் ஆசனத்தை வழங்க முயட்சி செய்துள்ளதாகவும், இதன்மூலம் நாகவில்லு எருக்கலம்பிட்டி மற்றும் ரசூல் நகர் மக்களுக்கிடையில் சிறந்த உறவை மேலும் வலுப்படுத்த தமது கட்சி பாடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் தொகுதி அமைப்பாளர் NTM தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், ஊர் ஜமாத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.