மரத்திலிருந்த விழுந்தவனை மாடு குத்தியதா போச்சு!

ஏ 35 பிரதான வீதியா புளியம்பொக்கனை பகுதியில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம், அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்கச் சங்கிலியை அறுத்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

குறித்த பெண் அணிந்திருந்த மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி அபகரித்து தப்பிச் சென்றுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விரைவாக செயல்பட்ட தர்மபுர போலீசார் சந்தேக நபரை துரத்திச் சென்று இராமநாதபுரம் பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து குறித்த பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை மீட்டதுடன், அவர்களிடமிருந்து 2.25 மில்லிகிராம் ஹெராயின், 20 கிராம் கேரளா கஞ்சா மற்றும் திருட்டில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தடையப் பொருட்கள் மற்றும் சந்தேக நபரை இன்றைய தினம் 28.03.2025 கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது மேலதிக விசாரணைகளுக்காக இரண்டு சந்தேக நபர்களையும் மீண்டும் தர்மபுரம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்