அம்பாறை – தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தனியார் பண்ணையொன்றில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தெஹியத்தகண்டிய, முவபெட்டிகேவல, ஹுலங்பந்தனாகல பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் வீரகெட்டிய, எதரம்தெனிய, கிராவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தெஹியத்தகண்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.