Thursday, February 13, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதற்கொலை செய்துகொண்ட பல்கலை மாணவர்

தற்கொலை செய்துகொண்ட பல்கலை மாணவர்

கிளிநொச்சி விவேகாநந்த நகர் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் ஓருவர் தமது வீட்டிலேயே உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு, கணிதப்பிரிவில் அவர் பயின்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், நீண்ட காலமாக, மன அழுத்தத்தால் பாதிப்படைந்திருந்த நிலையில், அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனால், அவர், உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகித்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

குறித்த மாணவன், 2020ம் ஆண்டு உயர் தரப்பரீட்சையின், கணிதப்பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 85ம் இடத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular