Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதில்லையடி ஆசிரியர் தாக்குதல்-மேலும் பலர் கைது

தில்லையடி ஆசிரியர் தாக்குதல்-மேலும் பலர் கைது

புத்தளத்தில் தில்லையடி பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 17 மாணவர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில், முன்னதாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் எதிர்வரும் 29ம் திகதி இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் மாணவர்களது ஒழுக்கம் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், அவரது இல்லத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற சில மாணவர்கள், குறித்த ஆசிரியர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பின்னர், காயமடைந்த ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சம்பவம் தொடர்பில், இதுவரையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular