Friday, January 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநாகவில் பாடசாலை மைதானம் முழுமையாக செப்பன்!

நாகவில் பாடசாலை மைதானம் முழுமையாக செப்பன்!

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மைதானம் செப்பனிடும் வேளைத்திட்டம் இன்று 3.4.2021 இடம்பெற்றது.

எருக்கலம்பிட்டி எப்.சீ அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். றிஜாஜ் அவர்களின் ஏற்பாட்டில் மைதானம் முழுமையாக செப்பனிடப்பட்டது.

குன்றும் குழியுமாக காணப்பட்ட மேற்படி மைதானம் நாளைய தினம் இடம்பெறவுள்ள எருக்கலம்பிட்டி எப்.சீ மற்றும் புத்தளம் செவன் ஸ்டார் கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டிக்காக இன்று காலை தொடக்கம் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த மைதானம் மழை காலங்கில் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சுற்று மதில் இல்லாத காரணத்தினால் இரவு வேளைகளில் போதை பாவனை விடயங்கள் இடம்பெறுவதாகவும் வாலிபர்கள் விசனம் தெரிவித்தனர்.

புத்தளம் எருக்கலம்பிட்டியை மையப்படுத்திய எருக்கலம்பிட்டி எப்.சீ உதைப்பந்தாட்டக் கழகம், புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் போட்டிகளில் விளையாடி வருவதுடன், லீக் போட்டிக்கு தெரிவாகிய முதலாவது சந்தர்ப்பததிலேயே இருதிப்போட்டிக்கு தெரிவாகி இருந்தமை ஓர் விஷேட அம்சமாகும்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular