Sponsored Advertisementspot_img
HomeLocal News"அப்பா ஒண்ணும் வாங்கி வரலியா?" - தந்தையின் நெஞ்சை உலுக்கும் பிஞ்சுக் குரல்!

“அப்பா ஒண்ணும் வாங்கி வரலியா?” – தந்தையின் நெஞ்சை உலுக்கும் பிஞ்சுக் குரல்!

வெற்றுப் பைகளும் புதைக்கப்பட்ட கனவுகளும்: ஒரு சாமானியனின் நரகப் பெருமூச்சு

விடியலின் முதல் வெளிச்சம் நம்பிக்கையை சுமந்து வர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் இன்றைய பொருளாதாரச் சூழலில், சூரியனின் ஒவ்வொரு விடியலும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத் தலைவர்களின் இதயங்களில் ஒருவித இனம்புரியாத திகிலையும், அச்சத்தையுமே விதைத்துவிட்டுச் செல்கிறது. “இன்றைய நாள் செலவுகள் எவ்வளவாக அமையுமோ? எந்த எதிர்பாராத செலவு வாசலைத் தட்டிவிடுமோ?” என்ற பெருமூச்சுடனே ஒவ்வொரு நாளும் தொடங்குகிறது.

முன்பெல்லாம் காலங்கள் வேறு விதமாக இருந்தன. கைகளில் புழங்கிய சில நூறு ரூபாய்கள் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டி மேய்த்தன. தந்தை உழைத்துக் கொண்டுவரும் சிறிய தொகையில், நான்கு பிள்ளைகளின் பாடசாலைப் பைகளில் சிற்றுண்டியும் காசும் தவழும். மாலையில் களைப்புடன் வீடு திரும்பும் பிள்ளைகளுக்குத் தேநீரும் சூடான கிம்புலா பனிசும் கிடைக்கும். இரவில் விளக்கொளியில் ஒரு துண்டு மீன் கறியோடு ஒட்டுமொத்தக் குடும்பமும் வட்டமாக அமர்ந்து பேசிய அந்தச் சிரிப்பொலிகள் இன்று எங்கே போயின? அந்தப் பொற்காலம் ஏழைகளின் வாழ்விலிருந்து நிரந்தரமாகத் திருடப்பட்டுவிட்டது. இன்று மீன் துண்டின் வாசனை கூட ஒரு ஆடம்பரமாகி, பழைய சோற்றுத் தண்ணீரில் உப்பு கரைத்து ஏப்பமிடும் அவலம்தான் எஞ்சி நிற்கிறது.

அத்தியாவசியப் பொருட்களின் தொடர் விலையேற்றமும் மறைமுக வரிகளும் குடும்பத் தலைவர்களின் தோள்களில் பாரமான மனச்சுமைகளை ஏற்றியுள்ளன

வேலைக்குக் கிளம்பும் ஒரு குடும்பத் தலைவனின் தோள்களில் பையை விட அதிகமாகத் தொங்குவது முடிவற்ற மனச்சுமைகள்தான்.

காலையில் கிழிந்த செருப்பை மாட்டிக்கொண்டு வேலைக்குக் கிளம்பும் ஒரு தகப்பனின் நடை ஒரு மனிதனின் நடை அல்ல; அது மரண தண்டனைக் கைதியின் பாரமான தப்படிகள். அவனது தோள்களில் தொங்கும் பழைய பையை விட, அவன் மனதை அழுத்தும் கேள்விகள் கொடூரமானவை. “இன்று பிள்ளைக்குத் தலைவலியோ காய்ச்சலோ வந்துவிட்டால் எங்கே போவது?”, “பாடசாலையில் புத்தகத்திற்கோ சீருடைக்கோ பணம் கேட்டுவிட்டால் என்ன செய்வது?”, “இந்த மாத கரண்ட் பில் சற்று அதிகமாக வந்தால் எந்தப் பொருளை விற்று அடைப்பது?”, “உடம்பு சரியில்லை என்று இரண்டு நாள் படுக்கையில் விழுந்துவிட்டால், இந்த நான்கு ஜீவன்களும் கஞ்சிக்கு எங்கே கையேந்தும்?”,

இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றும் அவன் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்கின்றன. குடும்ப உறவு ஒன்றின் திருமண அழைப்பிதழ் வாசலில் விழுந்தால் கூட, அந்தப் பரிசுக்கும் பயணத்திற்கும் வழியின்றி கூனிக்குறுகி, வாழ்த்த வேண்டிய தருணங்களை நினைத்து உள்ளூரச் சாகும் கொடுமை எந்த நரகத்திலும் இல்லாதது.

மாலையின் அந்தி சாயும் வேளை… அதுதான் இந்த பூலோக நரகத்தின் உச்சக்கட்டக் காட்சி.

வேலை முடிந்து, வியர்வையில் நனைந்து, சலித்துப் போன உடலோடு தெருமுனையில் நடந்து வரும் அந்தத் தகப்பனின் கண்கள் வீட்டின் வாசல் கதவையே பார்க்க அஞ்சுகின்றன. அங்கே, வாசற்படியில் நின்று கொண்டிருக்கும் அவனது ஐந்து வயதுச் சிறுமியின் கண்கள், தகப்பனின் முகத்தைப் பார்ப்பதற்கு முன்பாக அவன் கைகளைப் பார்க்கின்றன.

“அப்பா ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பாரா?” என்ற அந்தப் பிஞ்சின் ஏக்கப் பார்வை…

ஆனால், தகப்பனின் கைகள் வெறுமையாகத் தொங்குகின்றன. அந்தப் பிஞ்சு விரல்களுக்குக் கொடுக்க அவனிடம் ஒரு மிட்டாய் கூட இல்லை. தந்தையின் வெற்றுப் பைகளைப் பார்த்ததும், அந்தக் குழந்தையின் முகம் ஒரு கணம் சுருங்கி, ஏமாற்றம் தொண்டையை அடைக்க, வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளே ஓடும் அந்தக் காட்சி… எந்தவொரு தகப்பனின் உயிரையும் அந்த இடத்திலேயே உறைய வைத்துவிடும்.

தன் சொந்தப் பிள்ளைக்கு ஒரு மிட்டாயைக் கூட வாங்கிக் கொடுக்க முடியாத இந்த ஜென்மம் எதற்கு? இந்த ஏழை உடம்பில் இன்னும் எதற்காக இந்த மூச்சு ஓட வேண்டும்? தன் இயலாமையை ஒரு மூலையில் அமர்ந்து யாருக்கும் தெரியாமல் கண்ணீராகக் கரைக்கும் தகப்பனின் அழுகை, இந்தக் கல் நெஞ்சம் கொண்ட சமூகத்தின் காதுகளில் என்றுதான் கேற்கப்போகிறது?

அதிசயமும், கொடுமையும் என்னவென்றால் , அந்தப் பிள்ளைகளின் முதிர்ச்சிதான்.

பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் புது உடைகளுடனும், விதவிதமான பொம்மைகளுடனும் வீதியில் விளையாடும்போது, ஏழை வீட்டுப் பிள்ளை ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால் நின்று ஏக்கமாகப் பார்க்கும். சினிமாவுக்கும் சுற்றுலாவுக்கும் சக தோழர்கள் செல்லும்போது, தன் தகப்பனின் காலியான பாக்கெட்டுகளையும், தாயின் கிழிந்த சேலையையும் பார்த்துவிட்ட அந்தப் பிஞ்சு, தன் ஆசைகளை அப்படியே உள்ளுக்குள் புதைத்துக் கொள்ளும். “எனக்கு அதெல்லாம் பிடிக்காதுப்பா, நான் போகல” என்று தகப்பனின் முகத்தைப் பார்த்து ஒரு போலிச் சிரிப்பை உதிர்க்கும் அந்தக் குழந்தையின் பக்குவம் இருக்கிறதே… அது ஒரு தந்தையின் நெஞ்சில் ஆயிரம் கத்திகளை ஒரே நேரத்தில் இறக்குவதற்குச் சமம்.

ஆசைகளைச் சுமக்க வேண்டிய வயதில், வறுமையின் பாரத்தைச் சுமந்து, மெளனமாக அழும் அந்தப் பிஞ்சுகளின் வாழ்க்கை எந்தப் பாவத்தின் தண்டனை? ஏழை வீட்டில் பிறப்பதே ஒரு சாபமா? இந்த உலகத்தில் ஏழை மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது வாழ்வதற்கானது அல்லவா?; ஒவ்வொரு நாளும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் விழுங்கிவிட்டுச் செத்துப் பிழைக்கும் ஒரு தீராத யுத்தம். வறுமைக்கோட்டின் கீழ் புதைந்துபோன இந்த ஏழைக் கூட்டத்தின் உறைந்துபோன கண்ணீர்த் துளிகளுக்கு இந்த அதிகார வர்க்கத்திடம் என்றுதான் விடைகள் கிடைக்கப்போகிறதோ?

பணவீக்கமும் பொருளாதார நெருக்கடிகளும் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அவை ஒவ்வொரு சாதாரண மனிதனின் நிம்மதியையும், ஒரு ஏழைக் குடும்பத்தின் சிரிப்பையும், ஏழைப் பிள்ளைகளின் சிறிய ஆசைகளையும் அன்றாடம் பறித்துக் கொண்டிருக்கும் நிஜமான யுத்தக் களம். இந்த நெருக்கடிகள் தணிந்து, உழைக்கும் ஒவ்வொரு கரத்திற்கும் உரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் மீண்டும் மலர வேண்டும் என்பதே ஒவ்வொரு சாமானியனின் தீராத பிரார்த்தனை.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

“அப்பா ஒண்ணும் வாங்கி வரலியா?” – தந்தையின் நெஞ்சை உலுக்கும் பிஞ்சுக் குரல்!

வெற்றுப் பைகளும் புதைக்கப்பட்ட கனவுகளும்: ஒரு சாமானியனின் நரகப் பெருமூச்சு

விடியலின் முதல் வெளிச்சம் நம்பிக்கையை சுமந்து வர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் இன்றைய பொருளாதாரச் சூழலில், சூரியனின் ஒவ்வொரு விடியலும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத் தலைவர்களின் இதயங்களில் ஒருவித இனம்புரியாத திகிலையும், அச்சத்தையுமே விதைத்துவிட்டுச் செல்கிறது. “இன்றைய நாள் செலவுகள் எவ்வளவாக அமையுமோ? எந்த எதிர்பாராத செலவு வாசலைத் தட்டிவிடுமோ?” என்ற பெருமூச்சுடனே ஒவ்வொரு நாளும் தொடங்குகிறது.

முன்பெல்லாம் காலங்கள் வேறு விதமாக இருந்தன. கைகளில் புழங்கிய சில நூறு ரூபாய்கள் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டி மேய்த்தன. தந்தை உழைத்துக் கொண்டுவரும் சிறிய தொகையில், நான்கு பிள்ளைகளின் பாடசாலைப் பைகளில் சிற்றுண்டியும் காசும் தவழும். மாலையில் களைப்புடன் வீடு திரும்பும் பிள்ளைகளுக்குத் தேநீரும் சூடான கிம்புலா பனிசும் கிடைக்கும். இரவில் விளக்கொளியில் ஒரு துண்டு மீன் கறியோடு ஒட்டுமொத்தக் குடும்பமும் வட்டமாக அமர்ந்து பேசிய அந்தச் சிரிப்பொலிகள் இன்று எங்கே போயின? அந்தப் பொற்காலம் ஏழைகளின் வாழ்விலிருந்து நிரந்தரமாகத் திருடப்பட்டுவிட்டது. இன்று மீன் துண்டின் வாசனை கூட ஒரு ஆடம்பரமாகி, பழைய சோற்றுத் தண்ணீரில் உப்பு கரைத்து ஏப்பமிடும் அவலம்தான் எஞ்சி நிற்கிறது.

அத்தியாவசியப் பொருட்களின் தொடர் விலையேற்றமும் மறைமுக வரிகளும் குடும்பத் தலைவர்களின் தோள்களில் பாரமான மனச்சுமைகளை ஏற்றியுள்ளன

வேலைக்குக் கிளம்பும் ஒரு குடும்பத் தலைவனின் தோள்களில் பையை விட அதிகமாகத் தொங்குவது முடிவற்ற மனச்சுமைகள்தான்.

காலையில் கிழிந்த செருப்பை மாட்டிக்கொண்டு வேலைக்குக் கிளம்பும் ஒரு தகப்பனின் நடை ஒரு மனிதனின் நடை அல்ல; அது மரண தண்டனைக் கைதியின் பாரமான தப்படிகள். அவனது தோள்களில் தொங்கும் பழைய பையை விட, அவன் மனதை அழுத்தும் கேள்விகள் கொடூரமானவை. “இன்று பிள்ளைக்குத் தலைவலியோ காய்ச்சலோ வந்துவிட்டால் எங்கே போவது?”, “பாடசாலையில் புத்தகத்திற்கோ சீருடைக்கோ பணம் கேட்டுவிட்டால் என்ன செய்வது?”, “இந்த மாத கரண்ட் பில் சற்று அதிகமாக வந்தால் எந்தப் பொருளை விற்று அடைப்பது?”, “உடம்பு சரியில்லை என்று இரண்டு நாள் படுக்கையில் விழுந்துவிட்டால், இந்த நான்கு ஜீவன்களும் கஞ்சிக்கு எங்கே கையேந்தும்?”,

இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றும் அவன் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்கின்றன. குடும்ப உறவு ஒன்றின் திருமண அழைப்பிதழ் வாசலில் விழுந்தால் கூட, அந்தப் பரிசுக்கும் பயணத்திற்கும் வழியின்றி கூனிக்குறுகி, வாழ்த்த வேண்டிய தருணங்களை நினைத்து உள்ளூரச் சாகும் கொடுமை எந்த நரகத்திலும் இல்லாதது.

மாலையின் அந்தி சாயும் வேளை… அதுதான் இந்த பூலோக நரகத்தின் உச்சக்கட்டக் காட்சி.

வேலை முடிந்து, வியர்வையில் நனைந்து, சலித்துப் போன உடலோடு தெருமுனையில் நடந்து வரும் அந்தத் தகப்பனின் கண்கள் வீட்டின் வாசல் கதவையே பார்க்க அஞ்சுகின்றன. அங்கே, வாசற்படியில் நின்று கொண்டிருக்கும் அவனது ஐந்து வயதுச் சிறுமியின் கண்கள், தகப்பனின் முகத்தைப் பார்ப்பதற்கு முன்பாக அவன் கைகளைப் பார்க்கின்றன.

“அப்பா ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பாரா?” என்ற அந்தப் பிஞ்சின் ஏக்கப் பார்வை…

ஆனால், தகப்பனின் கைகள் வெறுமையாகத் தொங்குகின்றன. அந்தப் பிஞ்சு விரல்களுக்குக் கொடுக்க அவனிடம் ஒரு மிட்டாய் கூட இல்லை. தந்தையின் வெற்றுப் பைகளைப் பார்த்ததும், அந்தக் குழந்தையின் முகம் ஒரு கணம் சுருங்கி, ஏமாற்றம் தொண்டையை அடைக்க, வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளே ஓடும் அந்தக் காட்சி… எந்தவொரு தகப்பனின் உயிரையும் அந்த இடத்திலேயே உறைய வைத்துவிடும்.

தன் சொந்தப் பிள்ளைக்கு ஒரு மிட்டாயைக் கூட வாங்கிக் கொடுக்க முடியாத இந்த ஜென்மம் எதற்கு? இந்த ஏழை உடம்பில் இன்னும் எதற்காக இந்த மூச்சு ஓட வேண்டும்? தன் இயலாமையை ஒரு மூலையில் அமர்ந்து யாருக்கும் தெரியாமல் கண்ணீராகக் கரைக்கும் தகப்பனின் அழுகை, இந்தக் கல் நெஞ்சம் கொண்ட சமூகத்தின் காதுகளில் என்றுதான் கேற்கப்போகிறது?

அதிசயமும், கொடுமையும் என்னவென்றால் , அந்தப் பிள்ளைகளின் முதிர்ச்சிதான்.

பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் புது உடைகளுடனும், விதவிதமான பொம்மைகளுடனும் வீதியில் விளையாடும்போது, ஏழை வீட்டுப் பிள்ளை ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால் நின்று ஏக்கமாகப் பார்க்கும். சினிமாவுக்கும் சுற்றுலாவுக்கும் சக தோழர்கள் செல்லும்போது, தன் தகப்பனின் காலியான பாக்கெட்டுகளையும், தாயின் கிழிந்த சேலையையும் பார்த்துவிட்ட அந்தப் பிஞ்சு, தன் ஆசைகளை அப்படியே உள்ளுக்குள் புதைத்துக் கொள்ளும். “எனக்கு அதெல்லாம் பிடிக்காதுப்பா, நான் போகல” என்று தகப்பனின் முகத்தைப் பார்த்து ஒரு போலிச் சிரிப்பை உதிர்க்கும் அந்தக் குழந்தையின் பக்குவம் இருக்கிறதே… அது ஒரு தந்தையின் நெஞ்சில் ஆயிரம் கத்திகளை ஒரே நேரத்தில் இறக்குவதற்குச் சமம்.

ஆசைகளைச் சுமக்க வேண்டிய வயதில், வறுமையின் பாரத்தைச் சுமந்து, மெளனமாக அழும் அந்தப் பிஞ்சுகளின் வாழ்க்கை எந்தப் பாவத்தின் தண்டனை? ஏழை வீட்டில் பிறப்பதே ஒரு சாபமா? இந்த உலகத்தில் ஏழை மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது வாழ்வதற்கானது அல்லவா?; ஒவ்வொரு நாளும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் விழுங்கிவிட்டுச் செத்துப் பிழைக்கும் ஒரு தீராத யுத்தம். வறுமைக்கோட்டின் கீழ் புதைந்துபோன இந்த ஏழைக் கூட்டத்தின் உறைந்துபோன கண்ணீர்த் துளிகளுக்கு இந்த அதிகார வர்க்கத்திடம் என்றுதான் விடைகள் கிடைக்கப்போகிறதோ?

பணவீக்கமும் பொருளாதார நெருக்கடிகளும் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அவை ஒவ்வொரு சாதாரண மனிதனின் நிம்மதியையும், ஒரு ஏழைக் குடும்பத்தின் சிரிப்பையும், ஏழைப் பிள்ளைகளின் சிறிய ஆசைகளையும் அன்றாடம் பறித்துக் கொண்டிருக்கும் நிஜமான யுத்தக் களம். இந்த நெருக்கடிகள் தணிந்து, உழைக்கும் ஒவ்வொரு கரத்திற்கும் உரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் மீண்டும் மலர வேண்டும் என்பதே ஒவ்வொரு சாமானியனின் தீராத பிரார்த்தனை.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular