Tuesday, August 4, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅரசின் முடிவுக்குச் சர்வதேச அளவில் கிளம்பியது பலத்த எதிர்ப்பு!

அரசின் முடிவுக்குச் சர்வதேச அளவில் கிளம்பியது பலத்த எதிர்ப்பு!

இலங்கை நீதித்துறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய திருத்தச் சட்டமூலம் ஒன்று தொடர்பில் தற்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்காக இலங்கை அரசாங்கம் அண்மையில் முன்மொழிந்துள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்துச் சர்வதேச நீதிபதிகள் சங்கம் (International Association of Judges) தனது கடுமையான கவலையையும் எதிர்ப்பையும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் இத்தகைய சட்டத் திருத்தங்கள் தன்னிச்சையான மற்றும் தற்காலிகத் தீர்மானங்களின் அடிப்படையில் அமையக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச அமைப்பு, இவ்வாறான நடவடிக்கைகள் நீதித்துறையின் ஒட்டுமொத்தக் கட்டமைப்புக்கே பெரும் சவாலாக அமையும் என எச்சரித்துள்ளது.

1953 ஆம் ஆண்டு ஒஸ்திரியாவின் சல்ஸ்பர்க் நகரில் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது இத்தாலியின் ரோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இச்சங்கம், உலகின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச நீதிபதிகள் அமைப்பாகும். உலகெங்கிலும் உள்ள நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதையும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, தற்போது இலங்கையின் விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு எதிராக ஏற்கனவே இலங்கை நீதித்துறை சேவைச் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உட்படப் பல உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையிலேயே, இந்தத் தீவிர நிலைமையைக் கவனத்திற்கொண்டு சர்வதேச நீதிபதிகள் சங்கமும் அரசாங்கத்திற்குத் தனது அழுத்தமான கோரிக்கையை விடுத்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பது தர்க்கரீதியான, கொள்கைசார்ந்த மற்றும் வலுவான நடைமுறைகளின் மூலமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், மாறாக அவசர முடிவுகள் மூலம் நிறைவேற்றப்பட்டால் அது நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை முற்றாகச் சீர்குலைத்துவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனச் சர்வதேச நீதிபதிகள் சங்கம் கௌரவமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

அரசின் முடிவுக்குச் சர்வதேச அளவில் கிளம்பியது பலத்த எதிர்ப்பு!

இலங்கை நீதித்துறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய திருத்தச் சட்டமூலம் ஒன்று தொடர்பில் தற்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்காக இலங்கை அரசாங்கம் அண்மையில் முன்மொழிந்துள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்துச் சர்வதேச நீதிபதிகள் சங்கம் (International Association of Judges) தனது கடுமையான கவலையையும் எதிர்ப்பையும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் இத்தகைய சட்டத் திருத்தங்கள் தன்னிச்சையான மற்றும் தற்காலிகத் தீர்மானங்களின் அடிப்படையில் அமையக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச அமைப்பு, இவ்வாறான நடவடிக்கைகள் நீதித்துறையின் ஒட்டுமொத்தக் கட்டமைப்புக்கே பெரும் சவாலாக அமையும் என எச்சரித்துள்ளது.

1953 ஆம் ஆண்டு ஒஸ்திரியாவின் சல்ஸ்பர்க் நகரில் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது இத்தாலியின் ரோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இச்சங்கம், உலகின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச நீதிபதிகள் அமைப்பாகும். உலகெங்கிலும் உள்ள நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதையும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, தற்போது இலங்கையின் விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு எதிராக ஏற்கனவே இலங்கை நீதித்துறை சேவைச் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உட்படப் பல உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையிலேயே, இந்தத் தீவிர நிலைமையைக் கவனத்திற்கொண்டு சர்வதேச நீதிபதிகள் சங்கமும் அரசாங்கத்திற்குத் தனது அழுத்தமான கோரிக்கையை விடுத்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பது தர்க்கரீதியான, கொள்கைசார்ந்த மற்றும் வலுவான நடைமுறைகளின் மூலமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், மாறாக அவசர முடிவுகள் மூலம் நிறைவேற்றப்பட்டால் அது நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை முற்றாகச் சீர்குலைத்துவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனச் சர்வதேச நீதிபதிகள் சங்கம் கௌரவமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular