Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகஞ்சா கடத்தலில் தம்பதி... ரூ.18 கோடி சொத்துக்கள் முடக்கம்!

கஞ்சா கடத்தலில் தம்பதி… ரூ.18 கோடி சொத்துக்கள் முடக்கம்!

  • பத்துலுஓய வீதித் தடையில் சிக்கிய சொகுசு ஜீப்: பின்னணியில் ‘பத்தல ஹீன் மஹத்தயா’வின் பாரிய நெட்வொர்க்!
  • கஞ்சா கடத்தலில் தம்பதி… தப்பிக்க ரூ. 5 லட்சம் லஞ்சம்: கிடுக்கிப்பிடி போட்ட புத்தளம் பொலிஸ்!
  • ரூ. 18 கோடி சொத்துக்கள் முடக்கம்: பிரபல போதைப்பொருள் மன்னனுக்கு விழுந்த அடுத்த அடி!

ஜுட் சமந்த

நள்ளிரவு வேளையில் புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்துலுஓய வீதித் தடையில் முன்னெடுக்கப்பட்ட வழக்கமான வாகனச் சோதனை, இலங்கையின் பாரிய போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணியைத் தோண்டி எடுக்கும் ஆரம்பப் புள்ளியாக மாறியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 09ஆம் திகதி இரவு வீதித் தடையை நெருங்கிய சந்தேகத்திற்குரிய சொகுசு ஜீப் வண்டியை ஆராச்சிக்கட்டுவ போக்குவரத்துப் பொலிஸார் சோதனையிட்டபோது, அதில் 17 கிலோ 985 மில்லிகிராம் எடைகொண்ட கஞ்சா பொதிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டியில் பயணித்த 24 வயது இளைஞனும் 23 வயது யுவதியும் தாம் கணவன் – மனைவி எனக் கூறிக்கொண்டு, தம்மைக் கைது செய்வதைத் தவிர்க்க பொலிஸாருக்கு முதலில் 1 இலட்சம் ரூபாயையும், பின்னர் அதனை 5 இலட்சம் ரூபாயாகவும் அதிகரித்து இலஞ்சம் வழங்கப் பேரம் பேசியுள்ளனர். எனினும், ஆராச்சிக்கட்டுவ போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களான கோனார (73916) மற்றும் மேதிஸ் (78293) ஆகியோர் அந்தப் பணப் பேராசையை நிராகரித்து இருவரையும் ஜீப் வண்டியுடன் மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன சொகுசு ஜீப் வண்டியின் பின்னணி குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவும் தீவிர விசாரணையில் இறங்கின.

அந்த இரகசிய விசாரணையின் முடிவில் ஒரு முக்கிய விபரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த ஜீப் வண்டி தனமல்வில – ஹம்பேகமுவ பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் ‘பத்தல ஹீன் மஹத்தயா’ என்ற பெயருடைய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரால், தனது இரண்டாவது மகனின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட ஒன்றாகும். இதையடுத்து, இந்த வாகனத்தை எவருக்கும் விற்பனை செய்வதையோ அல்லது அன்பளிப்பாக மாற்றுவதையோ தடுக்கும் வகையில், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவூடாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

விசாரணைகள் விரிய விரிய, ‘பத்தல ஹீன் மஹத்தயா’ என்பவரின் நீண்டகால சட்டவிரோத சாம்ராஜ்யத்தின் தகவல்களும் மீண்டும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

கடந்த 2005ஆம் ஆண்டு 501 கிலோ கஞ்சாவுடன் தனமல்வில பொலிஸாராலும், 2021ஆம் ஆண்டு தனது பேருந்து மூலம் 337 கிலோ கஞ்சாவைக் கடத்திய போது கெக்கிராவ பொலிஸாராலும், பின்னர் 2022ஆம் ஆண்டு வெல்லவாயவில் 130 கிலோ கஞ்சாவை பரலில் மறைத்து வைத்திருந்த போது போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினராலும் இவர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.

சட்டத்தின் பிடி இறுகியதன் விளைவாக, இந்த போதைப்பொருள் வர்த்தகருக்குச் சொந்தமான பெருமளவிலான சொத்துக்களை நீதிமன்றங்கள் ஏற்கனவே முடக்கியுள்ளன.

எம்பிலிப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள 300 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘தருஷ பார்மசி’, சந்திரிகாவெவ பகுதியில் அமைந்துள்ள 700 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘வைட் ஹவுஸ்’ ஹோட்டல், மித்தெனிய மற்றும் பநாமுற பகுதிகளில் உள்ள பல வணிகக் கட்டடங்கள், காணிகள் மற்றும் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான மாடி வீடு உட்பட சுமார் 1,800 இலட்சம் ரூபாய் (18 கோடி) பெறுமதியான சொத்துக்கள் தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றங்களின் உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வீதியில் சிக்கிய சொகுசு ஜீப் வண்டியும் அந்த நீண்ட சொத்துப் பட்டியலில் இணைந்துள்ளது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

கஞ்சா கடத்தலில் தம்பதி… ரூ.18 கோடி சொத்துக்கள் முடக்கம்!

  • பத்துலுஓய வீதித் தடையில் சிக்கிய சொகுசு ஜீப்: பின்னணியில் ‘பத்தல ஹீன் மஹத்தயா’வின் பாரிய நெட்வொர்க்!
  • கஞ்சா கடத்தலில் தம்பதி… தப்பிக்க ரூ. 5 லட்சம் லஞ்சம்: கிடுக்கிப்பிடி போட்ட புத்தளம் பொலிஸ்!
  • ரூ. 18 கோடி சொத்துக்கள் முடக்கம்: பிரபல போதைப்பொருள் மன்னனுக்கு விழுந்த அடுத்த அடி!

ஜுட் சமந்த

நள்ளிரவு வேளையில் புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்துலுஓய வீதித் தடையில் முன்னெடுக்கப்பட்ட வழக்கமான வாகனச் சோதனை, இலங்கையின் பாரிய போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணியைத் தோண்டி எடுக்கும் ஆரம்பப் புள்ளியாக மாறியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 09ஆம் திகதி இரவு வீதித் தடையை நெருங்கிய சந்தேகத்திற்குரிய சொகுசு ஜீப் வண்டியை ஆராச்சிக்கட்டுவ போக்குவரத்துப் பொலிஸார் சோதனையிட்டபோது, அதில் 17 கிலோ 985 மில்லிகிராம் எடைகொண்ட கஞ்சா பொதிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டியில் பயணித்த 24 வயது இளைஞனும் 23 வயது யுவதியும் தாம் கணவன் – மனைவி எனக் கூறிக்கொண்டு, தம்மைக் கைது செய்வதைத் தவிர்க்க பொலிஸாருக்கு முதலில் 1 இலட்சம் ரூபாயையும், பின்னர் அதனை 5 இலட்சம் ரூபாயாகவும் அதிகரித்து இலஞ்சம் வழங்கப் பேரம் பேசியுள்ளனர். எனினும், ஆராச்சிக்கட்டுவ போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களான கோனார (73916) மற்றும் மேதிஸ் (78293) ஆகியோர் அந்தப் பணப் பேராசையை நிராகரித்து இருவரையும் ஜீப் வண்டியுடன் மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன சொகுசு ஜீப் வண்டியின் பின்னணி குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவும் தீவிர விசாரணையில் இறங்கின.

அந்த இரகசிய விசாரணையின் முடிவில் ஒரு முக்கிய விபரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த ஜீப் வண்டி தனமல்வில – ஹம்பேகமுவ பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் ‘பத்தல ஹீன் மஹத்தயா’ என்ற பெயருடைய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரால், தனது இரண்டாவது மகனின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட ஒன்றாகும். இதையடுத்து, இந்த வாகனத்தை எவருக்கும் விற்பனை செய்வதையோ அல்லது அன்பளிப்பாக மாற்றுவதையோ தடுக்கும் வகையில், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவூடாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

விசாரணைகள் விரிய விரிய, ‘பத்தல ஹீன் மஹத்தயா’ என்பவரின் நீண்டகால சட்டவிரோத சாம்ராஜ்யத்தின் தகவல்களும் மீண்டும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

கடந்த 2005ஆம் ஆண்டு 501 கிலோ கஞ்சாவுடன் தனமல்வில பொலிஸாராலும், 2021ஆம் ஆண்டு தனது பேருந்து மூலம் 337 கிலோ கஞ்சாவைக் கடத்திய போது கெக்கிராவ பொலிஸாராலும், பின்னர் 2022ஆம் ஆண்டு வெல்லவாயவில் 130 கிலோ கஞ்சாவை பரலில் மறைத்து வைத்திருந்த போது போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினராலும் இவர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.

சட்டத்தின் பிடி இறுகியதன் விளைவாக, இந்த போதைப்பொருள் வர்த்தகருக்குச் சொந்தமான பெருமளவிலான சொத்துக்களை நீதிமன்றங்கள் ஏற்கனவே முடக்கியுள்ளன.

எம்பிலிப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள 300 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘தருஷ பார்மசி’, சந்திரிகாவெவ பகுதியில் அமைந்துள்ள 700 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘வைட் ஹவுஸ்’ ஹோட்டல், மித்தெனிய மற்றும் பநாமுற பகுதிகளில் உள்ள பல வணிகக் கட்டடங்கள், காணிகள் மற்றும் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான மாடி வீடு உட்பட சுமார் 1,800 இலட்சம் ரூபாய் (18 கோடி) பெறுமதியான சொத்துக்கள் தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றங்களின் உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வீதியில் சிக்கிய சொகுசு ஜீப் வண்டியும் அந்த நீண்ட சொத்துப் பட்டியலில் இணைந்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular