இலங்கையின் பாதாள உலகத்தை ஆட்டிப்படைக்கும் முக்கிய குற்றவாளியான ‘கஞ்சிபானி இம்ரானை’ வலைவீசித் தேடிவரும் கதையில் இப்போது ஒரு புதிய சர்வதேச திருப்பம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச எல்லையைக் கடந்து தப்பி ஓடும் இந்த நிழல் உலகக் கடத்தல்காரனைப் பிடிக்க, இலங்கை பொலிஸின் அதிசிறப்புப் படையான வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரொகான் ஒலுகல தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தோனேசியாவிற்கு அவசரமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த சர்வதேச வேட்டையின் பின்னணியில் ஒரு பரபரப்பான ‘ஹாலிவுட் பாணி’ சேஸிங் நடந்துள்ளது. கஞ்சிபான இம்ரான் மலேசியாவில் தங்கியிருப்பதாக இலங்கை உளவுத்துறைக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலைப் பெற்ற அடுத்த கணமே, ASP ரொகான் ஒலுகல தலைமையிலான அதிரடிப் படை மலேசியாவிற்குப் பறந்தது. ஆனால், பொலிஸார் தன்னை நெருங்குவதை எப்படியோ மோப்பம் பிடித்த கஞ்சிபான இம்ரான், கடைசி நொடியில் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
கஞ்சிபான இம்ரான் தப்பினாலும், மலேசிய மண்ணில் இலங்கை பொலிஸார் நடத்திய ஆபரேஷன் சும்மா அமையவில்லை! கஞ்சிபான இம்ரானின் பிரதான அடியாட்களில் ஒருவரான ‘ரத்மலானே சைமா’ என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட 3 முக்கிய குற்றவாளிகளை மலேசிய பொலிஸாரின் உதவியுடன் மடக்கிப் பிடிப்பதில் இலங்கை பொலிஸார் அபார வெற்றி கண்டுள்ளனர். இந்த கைதுகள் கஞ்சிபானயின் நெட்வொர்க்கிற்கு விழுந்த மரண அடியாகும்.
மலேசியாவில் இருந்து தப்பிய கஞ்சிபான இம்ரான், இப்போது இந்தோனேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயல்வதாக புதிய உளவுத் தகவல்கள் கசிந்துள்ளன. இதையடுத்தே, இலங்கை பொலிஸ் படை தனது அடுத்த இலக்காக இந்தோனேசியாவை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தோனேசிய பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து, அவரை நாலாபுறமும் சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானே சைமா’ உள்ளிட்ட சந்தேகநபர்கள் பற்றிய முழு விவரங்கள் மற்றும் இந்த சர்வதேச தேடுதல் வேட்டையின் அடுத்தகட்ட நகர்வுகள் அடங்கிய உத்தியோகபூர்வ அறிக்கையை, பொலிஸ் ஊடகப் பிரிவு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடவுள்ளது. கஞ்சிபான இம்ரானின் இந்த சர்வதேச ஒளிந்தாட்டம் முடிவுக்கு வருமா என்பதை நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகின்றனர்.


