Friday, June 19, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeMuslim Worldதிடீர் திருப்பம்! இஸ்ரேல் - ஹெஸ்புல்லா இடையில் அவசர போர்நிறுத்தம்!

திடீர் திருப்பம்! இஸ்ரேல் – ஹெஸ்புல்லா இடையில் அவசர போர்நிறுத்தம்!

  • வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணி முதல் (GMT 1300) இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
  • அமெரிக்கா மற்றும் கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள், ஈரானின் நேரடி ஒத்துழைப்புடன் இந்த முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
  • முழுமையான போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படாமல் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியாது என ஈரான் தங்களுக்குத் தெரிவித்திருந்ததாக ஹெஸ்புல்லா தரப்பு குறிப்பிட்டுள்ளது.

ரொய்ட்டர்: மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாகக் தணல் பறந்து கொண்டிருந்த போர் மேகங்களுக்கு மத்தியில், ஒரு முக்கிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், இந்த அமைதி அவ்வளவு இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த உடன்பாடு எட்டப்படுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னர், லெபனான் எல்லைப் பகுதிகளில் இரவோடிரவாக உக்கிரமான குண்டுமழை பொழியப்பட்டது. லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மாத்திரம் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, தெற்கு லெபனானில் ஹெஸ்புல்லா நடத்திய பதில் தாக்குதலில் 4 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது இந்த யுத்தத்தில் இஸ்ரேலிய படைக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் குருதி சிந்திய மோதல்கள்தான், அமெரிக்காவும் ஈரானும் இணைந்து உருவாக்கிய சமாதான முயற்சிகளைப் பெரும் கேள்விக்குறியாக்கின. கடந்த புதன்கிழமை மாத்திரமே மத்திய கிழக்கின் பரந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்க-ஈரான் இடைக்கால உடன்படிக்கை கையெழுத்தானது. ஆனால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் லெபனான் எல்லையில் வன்முறை வெடித்ததால், ஒட்டுமொத்த உடன்படிக்கையும் முறியும் அபாயம் ஏற்பட்டது.

இதற்கிடையில், ஈரானின் இராஜதந்திர காய்நகர்த்தல்களும் இங்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. “முழுமையான போர்நிறுத்தம் ஒன்று அமுலாகாமல், அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்க முடியாது” என ஈரான் தங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்ததாக ஹெஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதன் விளைவாகவே, அமெரிக்க மற்றும் கட்டார் நாட்டுப் பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானின் பின்னணி உதவியுடன் இந்த அவசர உடன்பாட்டைச் சாத்தியமாக்கியுள்ளனர்.

அமெரிக்கா, ஈரான் மற்றும் அவர்களின் கூட்டணி நாடுகள் அனைத்தும் லெபனான் உள்ளிட்ட அனைத்துப் போர்முனைகளிலும் தங்களது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்த வேண்டும் என்பதே தற்போதைய பிராந்திய ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாகும். வாரத்தின் தொடக்கத்தில் வன்முறைகள் ஓரளவு குறைந்திருந்தாலும், மீண்டும் வெடித்த உக்கிரப் போருக்குப் பின்னர் தற்போது அமுலாகியுள்ள இந்த போர்நிறுத்தம் நீடிக்குமா என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

திடீர் திருப்பம்! இஸ்ரேல் – ஹெஸ்புல்லா இடையில் அவசர போர்நிறுத்தம்!

  • வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணி முதல் (GMT 1300) இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
  • அமெரிக்கா மற்றும் கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள், ஈரானின் நேரடி ஒத்துழைப்புடன் இந்த முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
  • முழுமையான போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படாமல் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியாது என ஈரான் தங்களுக்குத் தெரிவித்திருந்ததாக ஹெஸ்புல்லா தரப்பு குறிப்பிட்டுள்ளது.

ரொய்ட்டர்: மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாகக் தணல் பறந்து கொண்டிருந்த போர் மேகங்களுக்கு மத்தியில், ஒரு முக்கிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், இந்த அமைதி அவ்வளவு இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த உடன்பாடு எட்டப்படுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னர், லெபனான் எல்லைப் பகுதிகளில் இரவோடிரவாக உக்கிரமான குண்டுமழை பொழியப்பட்டது. லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மாத்திரம் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, தெற்கு லெபனானில் ஹெஸ்புல்லா நடத்திய பதில் தாக்குதலில் 4 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது இந்த யுத்தத்தில் இஸ்ரேலிய படைக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் குருதி சிந்திய மோதல்கள்தான், அமெரிக்காவும் ஈரானும் இணைந்து உருவாக்கிய சமாதான முயற்சிகளைப் பெரும் கேள்விக்குறியாக்கின. கடந்த புதன்கிழமை மாத்திரமே மத்திய கிழக்கின் பரந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்க-ஈரான் இடைக்கால உடன்படிக்கை கையெழுத்தானது. ஆனால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் லெபனான் எல்லையில் வன்முறை வெடித்ததால், ஒட்டுமொத்த உடன்படிக்கையும் முறியும் அபாயம் ஏற்பட்டது.

இதற்கிடையில், ஈரானின் இராஜதந்திர காய்நகர்த்தல்களும் இங்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. “முழுமையான போர்நிறுத்தம் ஒன்று அமுலாகாமல், அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்க முடியாது” என ஈரான் தங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்ததாக ஹெஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதன் விளைவாகவே, அமெரிக்க மற்றும் கட்டார் நாட்டுப் பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானின் பின்னணி உதவியுடன் இந்த அவசர உடன்பாட்டைச் சாத்தியமாக்கியுள்ளனர்.

அமெரிக்கா, ஈரான் மற்றும் அவர்களின் கூட்டணி நாடுகள் அனைத்தும் லெபனான் உள்ளிட்ட அனைத்துப் போர்முனைகளிலும் தங்களது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்த வேண்டும் என்பதே தற்போதைய பிராந்திய ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாகும். வாரத்தின் தொடக்கத்தில் வன்முறைகள் ஓரளவு குறைந்திருந்தாலும், மீண்டும் வெடித்த உக்கிரப் போருக்குப் பின்னர் தற்போது அமுலாகியுள்ள இந்த போர்நிறுத்தம் நீடிக்குமா என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular