Tuesday, July 21, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமெஸ்ஸியின் அர்ஜென்டினாவை அலறவிட்டு மகுடம் சூடியது ஸ்பெயின் இளம்படை!

மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை அலறவிட்டு மகுடம் சூடியது ஸ்பெயின் இளம்படை!

  • மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை அலறவிட்ட ஸ்பெயின் ‘சிறுவர்கள்’: நியூஜெர்சியில் மகுடம் சூடியது இளம்படை!
  • கேப் வேர்டேவிடம் தடுமாற்றம் முதல் உலகக் கிண்ண சாம்பியன் வரை: ஸ்பெயினின் அசாத்திய மிரட்டல் பயணம்!
  • 120 நிமிடங்கள், ஒரு ஷாட் கூட டார்கெட் இல்லை: அர்ஜென்டினாவை முற்றாக முடக்கிய ஸ்பெயினின் ‘பார்முலா’!

உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் மற்றுமொரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை வீழ்த்த முடியாது என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து, நியூஜெர்சியில் நடைபெற்ற அதிரடியான இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முத்தமிட்டுள்ளது ஸ்பெயின் இளம்படை.

முப்பது நாட்களுக்கு முன்னர் எவராலும் கணிக்கப்படாத ஒரு அணி, இன்று உலக கால்பந்தின் உச்சகட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தொடரின் ஆரம்பம் ஸ்பெயின் அணிக்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை. தங்களின் முதல் போட்டியில் உலகக் கிண்ணத்திற்குப் புதியவரான கேப் வேர்டே (Cape Verde) அணியுடன் கோல் எதுவுமின்றி ஸ்பெயின் சமநிலை பெற்றபோது, பல விமர்சகர்கள் ஸ்பெயினின் உலகக் கிண்ணக் கனவு அவ்வளவுதான் என எழுதத் தொடங்கினர். ஆனால், சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி மீண்டெழுந்த ஸ்பெயின், நாக்-அவுட் சுற்றுகளில் போர்த்துக்கல் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு எதிராக கடைசி நிமிடங்களில் ‘சூப்பர்-சப்’ மிக்கேல் மெரினோ அடித்த அசாத்திய கோல்களால் அரையிறுதிக்கு அசுரப் பாய்ச்சல் மேற்கொண்டது.

அரையிறுதியில் உலகக் கிண்ணத்தை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் அணியை, பயிற்சியாளர் டி லா புவெண்டேவின் (de la Fuente) தந்திரோபாய ஆட்டம் முற்றாக முடக்கியது. எம்பாப்பே போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்களை ஸ்பெயினின் நடுவண் கள வீரர்களான ரோட்ரி, டானி ஓல்மோ மற்றும் பாபியன் ரூயிஸ் ஆகியோர் பந்தைக் கூடத் தொடவிடாமல் தடுத்து, 2-0 என பிரான்ஸை வீட்டுக்கு அனுப்பினர். இந்தத் தொடரில் லாமின் யமால் எனும் 19 வயது இளம் நட்சத்திரம் மாத்திரம் கோல் அடிக்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்த அணியாக மிக்கேல் ஒயர்சபால் (5 கோல்கள்) மற்றும் பெரான் டோரஸ் ஆகியோர் இணைந்து ஸ்பெயினை வழிநடத்தினர்.

அதே அரையிறுதி வியூகத்துடனேயே அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் ஸ்பெயின் களமிறங்கியது. 65 சதவீதத்திற்கும் அதிகமாகப் பந்தைத் தன் வசம் வைத்திருந்த ஸ்பெயின் அணி, அர்ஜென்டினா வீரர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடையச் செய்தது. இதன் விளைவாக, போட்டியின் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ், ஸ்பெயினின் 19 வயது இளம் வீரர் குபார்சியை ஆபத்தான முறையில் தாக்கியதால் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். 120 நிமிட ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியால் ஸ்பெயினின் கோல் கம்பத்தை நோக்கி ஒரு துல்லியமான ஷாட் கூட அடிக்க முடியாமல் போனதே ஸ்பெயினின் பலத்திற்குச் சான்றாகும்.

மைதானத்தில் நிலவிய இந்த உச்சக்கட்ட பதற்றத்திற்கு மத்தியில், போட்டியின் 106ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அந்த வரலாற்றுத் தருணம் நிகழ்ந்தது. நிக்கோ வில்லியம்ஸ் அசிஸ்ட் செய்ய, மாற்று வீரராகக் களம் புகுந்த பெரான் டோரஸ் (Ferran Torres) பந்தை அர்ஜென்டினாவின் கோல் வலையின் உச்சிக்கு அதிரடியாக உதைத்து தள்ளினார். அரங்கம் அதிர எழுந்த அந்த ஒற்றை கோல், மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை வீழ்த்தி, ஸ்பெயினின் புதிய இளம் சகாப்தத்தை உலகக் கிண்ண சாம்பியன்களாக அரியாசனத்தில் ஏற்றியுள்ளது.

போட்டி முடிவடைந்ததாக நடுவர் இறுதி விசிலை ஊதிய அடுத்த கணமே, மாற்று வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியிலிருந்து ஸ்பெயின் வீரர்கள் தங்களின் வரலாற்று வெற்றியை கொண்டாடுவதற்காக மைதானத்தை நோக்கி ஓடி வந்தனர். அந்த உற்சாக வெள்ளத்திற்கு மத்தியில், மைதானத்தில் நின்றுகொண்டிருந்த அர்ஜென்டினாவின் நடுகள ஆட்டக்காரர் லியாண்ட்ரோ பரேடஸ் (Leandro Paredes), ஸ்பெயினின் இளம் நட்சத்திர வீரர் காவியை (Gavi) ஆக்ரோஷமாக தரையில் தள்ளி வீழ்த்தினார்.

தோல்வியின் விரக்தியும், வெற்றியின் கொண்டாட்டமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அந்த நொடியில், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் ஒரு மினி யுத்தமே வெடித்தது. வீரர்கள் ஒருவரையொருவர் முட்டித் தள்ளிக்கொண்டதால், இறுதிப் போட்டி நடந்த அரங்கம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

நிலைமை கைமீறிச் செல்வதனை அவதானித்த அர்ஜென்டினா அணியின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni) உடனடியாக மைதானத்திற்குள் விரைந்து இரு அணி வீரர்களுக்கும் இடையே மிகச் சாதுரியமாகத் தலையிட்டு, ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட வீரர்களின் கோபத்தைத் தணித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். தோல்வியின் வலியிலும் அவர் காட்டிய இந்த நிதானம் தற்போது கால்பந்து ரசிகர்களினால் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகின்றது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை அலறவிட்டு மகுடம் சூடியது ஸ்பெயின் இளம்படை!

  • மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை அலறவிட்ட ஸ்பெயின் ‘சிறுவர்கள்’: நியூஜெர்சியில் மகுடம் சூடியது இளம்படை!
  • கேப் வேர்டேவிடம் தடுமாற்றம் முதல் உலகக் கிண்ண சாம்பியன் வரை: ஸ்பெயினின் அசாத்திய மிரட்டல் பயணம்!
  • 120 நிமிடங்கள், ஒரு ஷாட் கூட டார்கெட் இல்லை: அர்ஜென்டினாவை முற்றாக முடக்கிய ஸ்பெயினின் ‘பார்முலா’!

உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் மற்றுமொரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை வீழ்த்த முடியாது என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து, நியூஜெர்சியில் நடைபெற்ற அதிரடியான இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முத்தமிட்டுள்ளது ஸ்பெயின் இளம்படை.

முப்பது நாட்களுக்கு முன்னர் எவராலும் கணிக்கப்படாத ஒரு அணி, இன்று உலக கால்பந்தின் உச்சகட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தொடரின் ஆரம்பம் ஸ்பெயின் அணிக்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை. தங்களின் முதல் போட்டியில் உலகக் கிண்ணத்திற்குப் புதியவரான கேப் வேர்டே (Cape Verde) அணியுடன் கோல் எதுவுமின்றி ஸ்பெயின் சமநிலை பெற்றபோது, பல விமர்சகர்கள் ஸ்பெயினின் உலகக் கிண்ணக் கனவு அவ்வளவுதான் என எழுதத் தொடங்கினர். ஆனால், சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி மீண்டெழுந்த ஸ்பெயின், நாக்-அவுட் சுற்றுகளில் போர்த்துக்கல் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு எதிராக கடைசி நிமிடங்களில் ‘சூப்பர்-சப்’ மிக்கேல் மெரினோ அடித்த அசாத்திய கோல்களால் அரையிறுதிக்கு அசுரப் பாய்ச்சல் மேற்கொண்டது.

அரையிறுதியில் உலகக் கிண்ணத்தை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் அணியை, பயிற்சியாளர் டி லா புவெண்டேவின் (de la Fuente) தந்திரோபாய ஆட்டம் முற்றாக முடக்கியது. எம்பாப்பே போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்களை ஸ்பெயினின் நடுவண் கள வீரர்களான ரோட்ரி, டானி ஓல்மோ மற்றும் பாபியன் ரூயிஸ் ஆகியோர் பந்தைக் கூடத் தொடவிடாமல் தடுத்து, 2-0 என பிரான்ஸை வீட்டுக்கு அனுப்பினர். இந்தத் தொடரில் லாமின் யமால் எனும் 19 வயது இளம் நட்சத்திரம் மாத்திரம் கோல் அடிக்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்த அணியாக மிக்கேல் ஒயர்சபால் (5 கோல்கள்) மற்றும் பெரான் டோரஸ் ஆகியோர் இணைந்து ஸ்பெயினை வழிநடத்தினர்.

அதே அரையிறுதி வியூகத்துடனேயே அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் ஸ்பெயின் களமிறங்கியது. 65 சதவீதத்திற்கும் அதிகமாகப் பந்தைத் தன் வசம் வைத்திருந்த ஸ்பெயின் அணி, அர்ஜென்டினா வீரர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடையச் செய்தது. இதன் விளைவாக, போட்டியின் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ், ஸ்பெயினின் 19 வயது இளம் வீரர் குபார்சியை ஆபத்தான முறையில் தாக்கியதால் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். 120 நிமிட ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியால் ஸ்பெயினின் கோல் கம்பத்தை நோக்கி ஒரு துல்லியமான ஷாட் கூட அடிக்க முடியாமல் போனதே ஸ்பெயினின் பலத்திற்குச் சான்றாகும்.

மைதானத்தில் நிலவிய இந்த உச்சக்கட்ட பதற்றத்திற்கு மத்தியில், போட்டியின் 106ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அந்த வரலாற்றுத் தருணம் நிகழ்ந்தது. நிக்கோ வில்லியம்ஸ் அசிஸ்ட் செய்ய, மாற்று வீரராகக் களம் புகுந்த பெரான் டோரஸ் (Ferran Torres) பந்தை அர்ஜென்டினாவின் கோல் வலையின் உச்சிக்கு அதிரடியாக உதைத்து தள்ளினார். அரங்கம் அதிர எழுந்த அந்த ஒற்றை கோல், மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை வீழ்த்தி, ஸ்பெயினின் புதிய இளம் சகாப்தத்தை உலகக் கிண்ண சாம்பியன்களாக அரியாசனத்தில் ஏற்றியுள்ளது.

போட்டி முடிவடைந்ததாக நடுவர் இறுதி விசிலை ஊதிய அடுத்த கணமே, மாற்று வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியிலிருந்து ஸ்பெயின் வீரர்கள் தங்களின் வரலாற்று வெற்றியை கொண்டாடுவதற்காக மைதானத்தை நோக்கி ஓடி வந்தனர். அந்த உற்சாக வெள்ளத்திற்கு மத்தியில், மைதானத்தில் நின்றுகொண்டிருந்த அர்ஜென்டினாவின் நடுகள ஆட்டக்காரர் லியாண்ட்ரோ பரேடஸ் (Leandro Paredes), ஸ்பெயினின் இளம் நட்சத்திர வீரர் காவியை (Gavi) ஆக்ரோஷமாக தரையில் தள்ளி வீழ்த்தினார்.

தோல்வியின் விரக்தியும், வெற்றியின் கொண்டாட்டமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அந்த நொடியில், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் ஒரு மினி யுத்தமே வெடித்தது. வீரர்கள் ஒருவரையொருவர் முட்டித் தள்ளிக்கொண்டதால், இறுதிப் போட்டி நடந்த அரங்கம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

நிலைமை கைமீறிச் செல்வதனை அவதானித்த அர்ஜென்டினா அணியின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni) உடனடியாக மைதானத்திற்குள் விரைந்து இரு அணி வீரர்களுக்கும் இடையே மிகச் சாதுரியமாகத் தலையிட்டு, ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட வீரர்களின் கோபத்தைத் தணித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். தோல்வியின் வலியிலும் அவர் காட்டிய இந்த நிதானம் தற்போது கால்பந்து ரசிகர்களினால் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகின்றது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular