Tuesday, July 21, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவண்டியின் விலையை விட டெக்ஸ் அதிகம்! ஹாபரில் துருப்பிடிக்கும் 1,000 கார்கள்!

வண்டியின் விலையை விட டெக்ஸ் அதிகம்! ஹாபரில் துருப்பிடிக்கும் 1,000 கார்கள்!

  • துறைமுகத்தில் முடங்கிய 1,000 சொகுசு வாகனங்கள்:
  • 40,000 வாகனங்கள் தேக்கம்:
  • காருக்கு 2 கோடி… கட்டணம் 5 கோடி!:
  • உண்மையான விலையை விட 3 மடங்கு அதிகம்:
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடப்பது என்ன?

உங்களின் கனவு காரின் உண்மையான விலை 2 கோடி ரூபா. ஆனால், அதனைத் துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும் என்றால் 5 கோடி ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இவ்வாறானதொரு நம்பமுடியாத அதிர்ச்சிச் சம்பவம்தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அரங்கேறியுள்ளது!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 1,000 சொகுசு மோட்டார் வாகனங்களை இறக்குமதியாளர்கள் விடுவித்துக்கொள்ளாமல் அப்படியே கைவிட்டுள்ளதால், அவை துறைமுக வளாகத்திலேயே துருப்பிடித்து நாசமடைந்து வருவதாக இலங்கை சுங்கத் திணைக்கள வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

40,000 வாகனங்கள் தேங்கிக் கிடப்பது ஏன்?

தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏறத்தாழ 40,000 மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் மறு ஏற்றுமதி செய்யப்பட வேண்டியவை. உலகளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலைமைகள் காரணமாக துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு இவற்றை ஏற்றிச் செல்ல வேண்டிய கப்பல்களால் பயணிக்க முடியாமல் போனதால் இவை அம்பாந்தோட்டையில் இறக்கி வைக்கப்பட்டன.

ஆனால், இவ்வாறு தற்காலிகமாக இறக்கப்பட்ட வாகனங்களுக்கும் தங்குமிடக் கட்டணம் பூதாகரமாக உருவெடுத்துள்ளதால், வாகன உரிமையாளர்கள் பெரும் தலையிடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

“6 வருடங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு காரை விடுவிக்கச் சென்ற உரிமையாளருக்கு, 5 கோடி ரூபாவை தங்கிடக் கட்டணமாகச் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது! இதனால் காரின் மொத்த விலை 7 கோடி ரூபாவாக, அதாவது அதன் உண்மையான பெறுமதியை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது.”

இந்த அதிரடிக் கட்டண விபரத்தைக் கேட்டறிந்த இறக்குமதியாளர் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். காரை மீட்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் அதிர்ச்சியையடுத்து, அவர் சுங்கத் திணைக்களத்திற்கு நிலைமையை விளக்கிக் கூறியதுடன், காரை மீட்கும் எண்ணத்தையே முற்றாகக் கைவிட்டுவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார்.

சீன நிறுவனத்தின் கட்டுப்பாடும் உருவான நெருக்கடியும்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகப் பொறுப்பு சீன நிறுவனமொன்றின் கீழ் கையளிக்கப்பட்டதன் பின்னரே இத்தகைய அநியாயமான தங்கிடக் கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலை உருவானதாக சுங்க அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வணிக நோக்கில் விதிக்கப்படும் இந்த அதீதக் கட்டணங்களால், பல கோடி பெறுமதியான வாகனங்கள் துறைமுகத்திலேயே முடங்கி, இலங்கையின் பொருளாதாரத்திற்கும் இறக்குமதியாளர்களுக்கும் பாரிய இழப்பை ஏற்படுத்தி வருகின்ற பேரதிர்ச்சி செய்தி வாகன பிரியர்களுக்கு பெரும் இடியாக விழுந்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

வண்டியின் விலையை விட டெக்ஸ் அதிகம்! ஹாபரில் துருப்பிடிக்கும் 1,000 கார்கள்!

  • துறைமுகத்தில் முடங்கிய 1,000 சொகுசு வாகனங்கள்:
  • 40,000 வாகனங்கள் தேக்கம்:
  • காருக்கு 2 கோடி… கட்டணம் 5 கோடி!:
  • உண்மையான விலையை விட 3 மடங்கு அதிகம்:
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடப்பது என்ன?

உங்களின் கனவு காரின் உண்மையான விலை 2 கோடி ரூபா. ஆனால், அதனைத் துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும் என்றால் 5 கோடி ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இவ்வாறானதொரு நம்பமுடியாத அதிர்ச்சிச் சம்பவம்தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அரங்கேறியுள்ளது!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 1,000 சொகுசு மோட்டார் வாகனங்களை இறக்குமதியாளர்கள் விடுவித்துக்கொள்ளாமல் அப்படியே கைவிட்டுள்ளதால், அவை துறைமுக வளாகத்திலேயே துருப்பிடித்து நாசமடைந்து வருவதாக இலங்கை சுங்கத் திணைக்கள வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

40,000 வாகனங்கள் தேங்கிக் கிடப்பது ஏன்?

தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏறத்தாழ 40,000 மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் மறு ஏற்றுமதி செய்யப்பட வேண்டியவை. உலகளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலைமைகள் காரணமாக துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு இவற்றை ஏற்றிச் செல்ல வேண்டிய கப்பல்களால் பயணிக்க முடியாமல் போனதால் இவை அம்பாந்தோட்டையில் இறக்கி வைக்கப்பட்டன.

ஆனால், இவ்வாறு தற்காலிகமாக இறக்கப்பட்ட வாகனங்களுக்கும் தங்குமிடக் கட்டணம் பூதாகரமாக உருவெடுத்துள்ளதால், வாகன உரிமையாளர்கள் பெரும் தலையிடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

“6 வருடங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு காரை விடுவிக்கச் சென்ற உரிமையாளருக்கு, 5 கோடி ரூபாவை தங்கிடக் கட்டணமாகச் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது! இதனால் காரின் மொத்த விலை 7 கோடி ரூபாவாக, அதாவது அதன் உண்மையான பெறுமதியை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது.”

இந்த அதிரடிக் கட்டண விபரத்தைக் கேட்டறிந்த இறக்குமதியாளர் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். காரை மீட்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் அதிர்ச்சியையடுத்து, அவர் சுங்கத் திணைக்களத்திற்கு நிலைமையை விளக்கிக் கூறியதுடன், காரை மீட்கும் எண்ணத்தையே முற்றாகக் கைவிட்டுவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார்.

சீன நிறுவனத்தின் கட்டுப்பாடும் உருவான நெருக்கடியும்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகப் பொறுப்பு சீன நிறுவனமொன்றின் கீழ் கையளிக்கப்பட்டதன் பின்னரே இத்தகைய அநியாயமான தங்கிடக் கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலை உருவானதாக சுங்க அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வணிக நோக்கில் விதிக்கப்படும் இந்த அதீதக் கட்டணங்களால், பல கோடி பெறுமதியான வாகனங்கள் துறைமுகத்திலேயே முடங்கி, இலங்கையின் பொருளாதாரத்திற்கும் இறக்குமதியாளர்களுக்கும் பாரிய இழப்பை ஏற்படுத்தி வருகின்ற பேரதிர்ச்சி செய்தி வாகன பிரியர்களுக்கு பெரும் இடியாக விழுந்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular