Wednesday, April 1, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவெளியாகிய உயர்தர பரீட்சை முடிவுகள்!

வெளியாகிய உயர்தர பரீட்சை முடிவுகள்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகின.

இதற்கமைய, இந்த பெறுபேறுகளை  www.doenets.lk  மற்றும்  www.results.exams.gov.lk ஆகிய இணையதளங்களுக்கு சென்று பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் நாட்டின் 2,362 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது, இதில் மொத்தம் 3,40,525 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 2,46,521 பேர் பாடசாலை வழிக் விண்ணப்பதாரர்கள் மற்றும் 94,004 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கணிதத்துறையில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவரான சுபைதீன் முஹம்மட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

வெளியாகிய உயர்தர பரீட்சை முடிவுகள்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகின.

இதற்கமைய, இந்த பெறுபேறுகளை  www.doenets.lk  மற்றும்  www.results.exams.gov.lk ஆகிய இணையதளங்களுக்கு சென்று பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் நாட்டின் 2,362 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது, இதில் மொத்தம் 3,40,525 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 2,46,521 பேர் பாடசாலை வழிக் விண்ணப்பதாரர்கள் மற்றும் 94,004 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கணிதத்துறையில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவரான சுபைதீன் முஹம்மட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular