Wednesday, April 30, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாய் வரை அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு டிசம்பர் மாதத்தின் பின்னர் குறைக்கப்படும் என்று வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று கிராமிய அபிவிருத்தி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவை 7500 ரூபாவில் இல் இருந்து 10000 ரூபாய் வரை அதிகரிக்க இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்நாட்களில் பிரதேச செயலக மட்டத்தில் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்ற போதிலும், இதனால் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி தற்போது 47244 சிறுநீரக நோயாளர்கள் உள்ளனர என்று தரவுகள் பதிவாகியுள்ளன. அந்த தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் தகவல் புதுப்பிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Paid Add

Official Instagram

Most Popular