Tuesday, February 25, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகிளிநொச்சியில் சிக்கிய அதிகளவான கஞ்சா!

கிளிநொச்சியில் சிக்கிய அதிகளவான கஞ்சா!

கிளிநொச்சி பகுதியில் முதல் தடவையாக அதிகளவான கஞ்சா கன்டுபிடிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

400 கிலோவுக்கு அதிகளவான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, கிளிநொச்சி பொலிசார் இன்று 24.02.2025 நடத்திய சுற்றிவளைப்பில் மாங்குளம் மற்றும் கிளிநொச்சி போலீஸ் பிரிவுகளை சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் 400 கிலோவுக்கு அதிகளவான கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டனர்

ஆணையிரவு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி கூலர் வண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட சுமார் 400 kg கேரள கஞ்சாவுடன் மாங்குளம் போலீஸ் பிரிவை சேர்ந்த ஒருவரும், கிளிநொச்சி போலீஸ் பிரிவை சேர்ந்த மற்றைய சந்தேக நபரும் மேற்படி கைதுசெய்யப்பட்டதுடன், கூலர் வாகனமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கத்து.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular