Saturday, March 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கில் கட்டுப்பணம் செலுத்திய EPDP!

வடக்கில் கட்டுப்பணம் செலுத்திய EPDP!

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று செலுத்தியது.

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான வைத்தியநாதன் தவநாதன் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தினார்.

கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தினையே இன்றைய தினம் செலுத்தியிருந்தனர்.

கடந்த முறை போன்று இம்முறையும் தனித்து போட்டியிடவுள்ளதாகவும், பொது அமைப்புக்கள் சார்ந்தோர் உட்பட பலர் போட்டியிடவுள்ளதாகவும் சுகந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தமது கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular