சமையல் எரிவாயு கசிந்து தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக குடும்பப் பெண் பலி!
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் 20.04.2025 அன்று சுமார் 3.30 மணியளவில், பரசுராமன் பரமேஸ்வரி 59 வயதுடைய பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் கசிவுகாரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உயிரிழந்தார்.
ஆடையில் தீப்பரவல் ஏற்பட்டதன் காரணமாக பலத்த காயங்களுடன் அவர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 22.04.2025 உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
