இலங்கை கடற்படையினர், 2025 ஏப்ரல் 23 அன்று கல்பிட்டி பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 751 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது,
இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் 2025 ஏப்ரல் 23 ஆம் திகதி கல்பிட்டி பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த 751 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 முதல் 25 வயதுக்குட்பட்ட தலைமன்னார் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டதுன், சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டி (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.